உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025
BIG STORIES
"பிறன் மனை நோக்கி"யால் காருக்குள் கத்திக் குத்து.. சரிந்த அரசு ஒப்பந்ததாரர்..! பெண்கள் அலறியடித்து ஓட்டம்
Oct 30, 2025 01:26 AM
441
"பிறன் மனை நோக்கி"யால் காருக்குள் கத்திக் குத்து.. சரிந்த அரசு ஒப்பந்ததாரர்..! பெண்கள் அலறியடித்து ஓட்டம்
சென்னை அசோக் நகர் காவல் நிலையம் அருகே காதலியுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக அரசு ஒப்பந்ததாரர் , குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பிரகாஷ், சென்னை வந்து அசோக்நகர் காவல் நிலையம் அருகே நான்காவது அவன்யூவில் அவருடைய காரில் அமர்ந்து இரு பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் காருக்குள் இருந்த பிரகாஷை கத்தியால் குத்தி உள்ளார் தடுக்க முயன்ற பெண்ணுக்கு கையில் வெட்டு விழுந்தது. உடன் இருந்த மற்றொரு பெண் அலறியடித்து ஓடியுள்ளார். விலாவில் கத்திக்குத்து காயத்துடன் ரத்தம் சொட்ட நடந்து சென்ற பிரகாஷ், அருகிலுள்ள அபார்ட்மெண்ட் வாசலில் விழுந்து உயிருக்கு போராடினார்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக உயிருக்கு போராடியவருக்கு அங்கிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார், 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, பிரகாஷை KK நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியில் இறந்து விட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக KK Nagar ESI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிசிடிவி காட்சிகளை வைத்து அவருடன் அருகில் உள்ள தேனீர் கடையில் அமர்ந்து டீ சாப்பிட்ட ஜாபர் கான் பேட்டையை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார், அந்தப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கையில் காயத்துடன் சிகிச்சை எடுக்க சென்ற தனஞ்செழியனையும், அவரது மனைவி சுகன்யாவையும் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் காதல் விவகாரத்தால் நிகழ்ந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கைது செய்யப்பட்டுள்ள தனஞ்செழியன் மற்றும் சுகன்யா ஆகியோர் கணவன் மனைவி என்பதும், தனசெழியன் கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மதுவிற்கு அடிமையான தனஞ்செழியன், கடந்த 2 மாதங்களுக்கு முன் போதையில் மனைவி சுகன்யாவை கடுமையாக அடித்து உதைத்துள்ளார், இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா தனஞ்செழியனை பிரிந்து சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு சென்று அங்கு சில மாதங்களாக வசித்து வந்ததார்
அப்போது சுகன்யாவுக்கு பாண்டிச்சேரியில் கட்டுமான நிறுவனம் நடத்திவரும் பிரகாஷ் என்ற பள்ளிகால நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 9 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள் ,அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் பிரகாஷ்சின் ஒப்பந்த நிறுவனத்திற்கு தேவையான பணிகளை ஆன்லைன் மூலமாக சென்னையில் இருந்தே சுகன்யா செய்து கொடுத்ததாக கூறப்படுகின்றது.
தற்போது சுகன்யா பாண்டிசேரியில் இருந்ததால் பிரகாஷுடன் நெருக்கமாகி நாளடைவில் ரகசியகாதலாக மாறியுள்ளது. பிரகாஷின் மனைவியும் விட்டு பிரிந்ததால் பிரகாஷ் மற்றும் சுகன்யா ஆகியோர் கணவன் மனைவி போல ஒன்றாகவே சுற்றியுள்ளனர்.
இந்த விஷயம் சுகன்யாவின் கணவரான தனஞ்செழியனுக்கு தெரிய வர இருவர் மீதும் தனஞ்செழியன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் செனாய் நகரில் மாநகராட்சி சார்பில் விடக்கூடிய டெண்டர் ஒன்றை எடுப்பதற்காக பிரகாஷ் , காதலி சுகன்யாவுடன் காரில் சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் சுகன்யா சென்னையில் வசித்து வரும் சித்தி மகள் குணசுந்தரியிடம், சென்னைக்கு வந்திருப்பதாகவும் தன்னை பார்க்க வருமாறும் கூறி, அசோக் நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு சென்று சாப்பிட்டு விட்டு கரண்ட் லொகேஷனை சுந்தரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
இதனை அப்படியே குணசுந்தரி சுகன்யாவின் கணவரான தனஞ்செயனிடம் கூற, கோபமடைந்த தனஞ்செயன் கத்தியுடன் அசோக் நகருக்கு அந்த லொகேஷனுக்கு சென்றுள்ளார். அப்போது காரில் ஓட்டுனர் சீட்டில் சீட் பெல்ட் போட்டு பிரகாஷ் அமர்ந்து இருக்க முன்சீட்டில் சுகன்யாவும், பின் சீட்டில் குனசுந்தரியும் அமர்ந்து இருக்கும் போது தனசெழியன் பேசிகொண்டே ஆப்பிள் அறுக்க பயன்படுத்தும் கத்தியால் பிரகாஷின்இடது விலாவில் இரண்டு முறை குத்தியதாகவும், அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குணசுந்தரி காரில் இருந்து அலறி அடித்து ஓடியதாகவும் தெரிவித்துள்ளார். தடுத்ததால் சுகன்யாவின் கையை அறுத்ததுடன், கொலை செய்து விடுவேன் எனக்கூறி மிரட்டி தனசெழியன் கையோடு அழைத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
மீண்டும் அக்கா , மாமாவை, ஒன்றாக சேர்த்து வைப்பதற்காக தான் சுகன்யா அனுப்பிய லொகேஷனை , தனது மாமா தனஞ்செழியனிடம் கொடுத்ததாகவும் ஆனால் கத்தியால் குத்தி கொலை செய்வார் என எதிர்பார்க்கவில்லை என குணசுந்தரி போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளார். தனஞ்செழியனை கைது செய்த போலீசார் இந்த கொலை சம்பவத்தில் குணசுந்தரிக்கு என்ன பங்கு என்பதை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu