RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

BIG STORIES

"அவளும், குழந்தையும் தூங்கட்டும்மா..எழுப்பாதீங்க".. ஆடிட்டர் குடும்பமே சிதைந்தது.. சென்னையை உலுக்கிய சம்பவம்..

Oct 28, 2025 03:10 AM

10344

"அவளும், குழந்தையும் தூங்கட்டும்மா..எழுப்பாதீங்க".. ஆடிட்டர் குடும்பமே சிதைந்தது.. சென்னையை உலுக்கிய சம்பவம்..

"அவளும், குழந்தையும் தூங்கட்டும்மா..எழுப்பாதீங்க".. ஆடிட்டர் குடும்பமே சிதைந்தது..

சென்னை அண்ணாநகர் 18 வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணா. இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு நிவேதிதா என்ற பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது

நிவேதிதா, தெற்கு ரயில்வேயின் பெரம்பூர் லோகோ அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் லவின் கண்ணன் என்ற மகன் இருந்தார். நவீன் கண்ணா தனது தாயார், தந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

27 ஆம் தேதியன்று காலை 7.45 மணிக்கு, நவீன் கண்ணா தனது தாய் புவனேஷ்வரியிடம் வெளியே செல்வதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

அடுத்த 1 மணி நேரத்திலேயே புவனேஷ்வரிக்கு அறிமுகம் இல்லாத செல்போன் எண்ணில் இருந்து நவீன் கண்ணா தொடர்புகொண்டுள்ளார். அப்போது தனது மனைவியும், குழந்தையும் அறையில் நீண்ட நேரம் தூங்குவார்கள், அவர்களை 11 மணி வரை தூங்க விடுங்கள், எழுப்ப வேண்டாம் என நவீன் கண்ணா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நிவேதிதாவின் தாய், புவனேஷ்வரிக்கு போன் செய்து, நிவேதிதாவின் அப்பா உடல்நிலை சரியில்லாததால் முகப்பேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை காண இன்று நிவேதிதா வருவதாக சொன்னாள், நான் போன் செய்தால் அவள் போனை எடுக்கவில்லை, போனை அவளிடம் கொடுங்களேன் என கூறியுள்ளார்.

அப்போது புவனேஷ்வரி, போனை கையில் எடுத்துக்கொண்டு நிவேதிதா அறைக்கு சென்றபோது, அறை உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் நிவேதிதா கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துள்ளனர்.

பின்னர் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது, சிறுவன் லவின் கண்ணா கழுத்தை துணியால் இறுக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அருகே நிவேதிதா கழுத்தில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை கண்டு புவனேஸ்வரி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே, "நாங்கள் மூன்று பேரும் செத்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டோம், அதனால் தங்களை காப்பாற்ற வேண்டாம்" என்று நிவேதிதா மாமியாரிடம் தெரிவித்துள்ளார்.என்ன நடக்கிறது என்றே புரியாமல் புவனேஸ்வரி அதிர்ச்சியில் இருந்துள்ளார்.

வெளியே சென்ற தனது மகனும் எதாவது விபரீத முடிவை எடுத்துவிடுவானோ என பயந்துபோன புவனேஸ்வரி, தன் மகனை எப்படியாவது காப்பாற்றுங்கள் என காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். போலீசாரும் நவீன் கண்ணாவின் மொபைல் சிக்கனலை வைத்து கண்டுபிடிக்கலாம் என நினைத்த போது, போனை நவீன் கண்ணா வீட்டிலேயே வைத்து விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் முன் விழுந்து, ஒரு நபர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு இறந்து கிடந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீகாந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலத்திற்கு அருகே செல்போன் ஒன்று நொறுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த சிம்கார்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மற்றொரு போனில் போலீசார் அந்த சிம் கார்டை போட்டு பார்த்தபோது அதில் DAD என்ற பெயரில் ஒரு எண் பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது . அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது தான் இறந்தவர் நவீன் என்ற முடிவிற்கு போலீசார் வந்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இப்படி குடும்பமே விபரீத முடிவை எடுக்க என்ன காரணம்? என போலீசார் துப்பு துலக்கியுள்ளனர். அப்போது தான் தான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

நவீன் செஸ் விளையாட்டு வீரர் என்பதால் அதன் மூலம் அவருக்கு, கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் ஆடிட்டராக மத்திய அரசு வேலை கிடைத்துள்ளது.

தான் பணியாற்றி வந்த மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை நவீன், தனது வங்கி கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை எல்லாம் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம் என நினைத்து நவீன்ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதில் நஷ்டமடைந்து பணத்தை தொலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நவீன் கையாடல் செய்து இருப்பது, துறை ரீதியான விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு, டெல்லிக்கு அது தொடர்பான அறிக்கையை அனுப்பி வைத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இருப்பது தெரிந்துள்ளது.

இதனால் நவீன், சமீப நாளாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் நவீன் நடந்ததை எல்லாம் தனது மனைவியிடம் தெரிவித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அவமான பட்டு வாழ்வதை விட குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்ளலாம் எனப்பேசி மனைவி கழுத்தை அறுத்து விட்டு, மகனையும் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரத்த காயத்துடன் கிடந்த நிவேதிதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அருகில் வசிக்கும் மோசஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும், பெண் கை,கழுத்தில் வெட்டுகாயங்களுடன் உயிருக்கு போராடி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, நிவேதிதா ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு பணியில் பெரிய பொறுப்பில் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கிய போதும் பேராசையால் ஆன்லைன் டிரேடிங், ஷேர் மார்கெட்டில் பணத்தை இழந்து கையாடல் செய்து சிக்கி கொண்டதால், விபரீத முடிவை தேடி, ஒரு குடும்பமே உருக்குலைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies