RECENT NEWS

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

Nov 17, 2025

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

Nov 17, 2025

BIG STORIES

நாட்டையே கலங்கடித்த விசித்திரமான திருட்டு சம்பவம்..! ‘Chair Heist!’ "கேள்விப்பட்டதுண்டா..?

Oct 24, 2025 04:41 PM

504

நாட்டையே கலங்கடித்த விசித்திரமான திருட்டு சம்பவம்..! ‘Chair Heist!’ "கேள்விப்பட்டதுண்டா..?

நாட்டையே கலங்கடித்த விசித்திரமான திருட்டு சம்பவம்..! ‘Chair Heist!’ "கேள்விப்பட்டதுண்டா..?

நாம் உணவகத்துக்கு சென்றால் என்ன எதிர்பார்ப்போம்? நல்ல உணவு, சுத்தமான இடம் மற்றும் கம்ஃபர்ட்டா ஒரு இருக்கை அவ்வளவுதான், இல்லையா? ஆனால், சில பேருக்கு அந்த இருக்கைகள் ஒரு 'Gold Mine' போன்று தோன்றியிருக்கிறது. ஆம், ஸ்பெயினில் நடந்திருக்கும் ஒரு விசித்திரமான திருட்டுக் கதை குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் அருகே உள்ளது Talavera de la Reina என்ற நகரம். இது ஒரு சிறிய நகரம் தான். ஆனால், இங்கு நிறைய பார்கள், காஃபி ஷாப்கள், ரெஸ்ட்டாரண்ட்கள் நிறைந்து காணப்படும் பகுதி. இங்கு உணவகத்துக்கு வெளியே அமர்ந்து காஃபி அருந்துவது மிகவும் சாதாரணமான கலாச்சாரமாக இருந்துவருகிறது.

இதனால், ஒவ்வொரு ரெஸ்டாரண்ட்டு வெளியிலும் டஜன் கணக்கில் இருக்கைகள், மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில்தான், சில மாதங்களாக அங்கிருக்கும் உணவக உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய தலைவலி ஏற்பட்டது. ஒவ்வொரு இரவும், உணவகங்களில் வெளியே போடப்படிருக்கும் சில இருக்கைகள் காணாமல் போவது தொடர்கதையாக இருந்துவந்தது. முதலில், ஏதோ ப்ராங்க் ஆக இருக்குமே என நினைத்தனர். ஆனால், ஒரு சில நாட்களுக்குள், 18 உணவகங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் காணாமல் போயிருப்பது, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 அப்போது தான், இது மகிழ்ச்சிக்காக செய்யப்படவில்லை. இது ஒரு பெரிய குழு திருட்டு என உணவக உரிமையாளர்களுக்கு புரியவந்தது. இதையடுத்து உடனே காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அங்கிருக்கும் இருக்கும் CCTV காட்சிகளை ஆய்வு செய்துவந்தனர். அப்போது தான், அந்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியே தெரியவந்தது.

இப்படி தொடர்ச்சியாக, இருக்கைகளை திருடியது, 6 ஆண்களும், 1 பெண்ணும் சேர்ந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல் என போலீசாருக்கு தெரியவந்தது. இரவு நேரம் எல்லா உணவகங்களும் மூடப்பட்ட பிறகு, அங்கு செல்லும் இந்த கும்பல், சத்தமில்லாமல் வெளியில் போடப்பட்டிருக்கும் இருக்கைகள் மற்றும் மேசைகள் எல்லாம் லாரியில் ஏற்றி விடுகின்றனர். இந்த operation-க்கு இவர்களுக்கு அதிகபட்சம் 10 நிமிடம் தான் நேரம் எடுத்துக்கொள்கின்றனர்.

சரி.,, இவை எல்லாம் வெறும், மேசை மற்றும் நாற்காலிகள் தானே? இவற்றால் என்ன லாபம் வந்துவிடும்? என நினைக்கலாம். இந்த கும்பல் திருடிய இருக்கைகள் எல்லாம் வெறும் plastic இருக்கைகள் அல்ல. உயர்தர மேசைகள் மற்றும் விலை உயர்ந்த இருக்கைகள். இவற்றின் மதிப்புகள் கிட்டத் தட்ட ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இந்த கும்பல் திருடும் இருக்கைகள் லோக்கல் market-ல் விற்கவில்லை. அதற்குப் பதிலாக, சில பொருட்களை ஸ்பெயினில் இருக்கும் இரண்டாம் தர பொருட்கள் விற்கும் கடைகளில் விற்பனை செய்திருக்கின்றனர். மேலும் சில இருக்கைகளை மொராக்கோ, ரொமேனியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதாவது, இது ஒரு சாதரண திருட்டு அல்ல. இது ஒரு சர்வதேச இருக்கை திருட்டு என கூறப்படுகிறது.

இதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 100-க்கும் மேற்பட்ட மேசை மற்றும் இருக்கைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இனி இரவில் உணவகங்களை மூடும்போது, இருக்கை மற்றும் மேசைகளை உள்ளே வைத்து கடைகளை மூடும்படி உணவக உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஸ்பெனில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தை ”Chairs Heist” என வர்ணிக்கப்படுகிறது. Customer போன திரும்ப வருவாங்க… ஆனால் chair போனா திரும்ப வராது இல்லையா? இந்த திருட்டு சம்பவம் அங்கிருக்கும் உணவக உரிமையாளர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தபால் நிலைய  பார்சலை திருடி தாய்க்கு சேலை  ‘கிப்ட்’ .. சீரியல் கொள்ளையன் கைது..! ஒரே இரவில் தொடர் கைவரிசை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies