RECENT NEWS

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

Nov 13, 2025

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

Nov 13, 2025

BIG STORIES

பேசுறதல்லாம் திருமாவளவன்.. செய்தியா வெளியிட்டா குத்தமா?.. பூராம்..பொய்யா.. சொன்னா எப்படி ?

Oct 24, 2025 02:37 AM

308

பேசுறதல்லாம் திருமாவளவன்.. செய்தியா வெளியிட்டா குத்தமா?.. பூராம்..பொய்யா.. சொன்னா எப்படி ?

சென்னை உயர்நீதிமன்றம் அருகே முறைத்ததால் வழக்கறிஞரை தாக்கியதாக முதலில் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், விசிகவினர் தாக்கிய சம்பவத்தையே தொலைக்காட்சியை பார்த்து தான், தெரிந்து கொண்டதாக கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார்

சென்னை அடுத்த திருக்கழுகுன்றம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் , சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அருகே தனது வாகனத்துக்கு முன்னால் நின்று முறைத்ததால் தனது தம்பிகள் நாலு தட்டு தட்டியதாகவும், சரியாக கூட அடிக்கைவில்லை என்றும் தொண்டர்களிடம் கெத்தாக பேசினார்

இது தொடர்பான வழக்கு விசாரணையில் , தடுக்க வேண்டிய இடத்திலிருந்த திருமாவளவன் , அந்த தாக்குதல் சம்பவத்தை தூண்டியதாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி , சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை நடந்து வரும் நிலையில், சென்னை முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் , தாக்குதல் சம்பவத்தை தொலைக்காட்சி செய்தியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக அந்தர் பல்டி அடித்துள்ளார்

தாக்குதல் சம்பவம் மதியம் 2.34க்கு நடந்ததாகவும், மதியம் 2 .39க்கே பாலிமர் தொலைக்காட்சியின் டிஜிட்டல் சைட்டில் வீடியோ அப்டேட் செய்யப்பட்டதாகவும் திருமாவளவன் பொய்யான தகவலை மீண்டும் தெரிவித்தார்

ஏற்கனவே அந்த வீடியோ எப்படி யாரால் எடுக்கப்பட்டது? எங்கிருந்து , எத்தனை மணிக்கு வந்தது ? அது எத்தனை மணிக்கு செய்தியாக ஒளிப்பரப்பானது ? என்பதை எல்லாம் ஆதாரத்துடன் விவரித்த பின்னரும், திருமாவளவன் தவறாகவே பேசி வருகிறார்

பத்தாண்டுகளுக்கு முன்பு புளியந்தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெரும்பாலான கோயில்கள் புத்த விகார்களாக இருந்தவை தான் , என தான் பேசியதாகவும், அதனை சிவாலயங்களை இடிக்க சொல்கிறார் திருமாவளவன் என செய்தி வெளியிட்டதாகவும் திருமாவளவன் கூறினார். அன்று திருவாய் திறந்து உதிர்த்த முத்துக்கள் இவை தான்..

அதே போல மனுஷ்மிருதியில் இருக்கும் வாக்கியத்தை மேற்கோள் காட்டி பேசியதற்கு இந்து பெண்களை விபச்சாரிகள் என திருமாவளவன் பேசுகிறார் என செய்தி வெளியிட்டதாக திருமாவளவன் பொய்யான தகவல்களை தெரிவித்தார். அன்று அவர் பேசியது இது தான்..!

ஒன்றை சொல்ல அவர் மறந்து விட்டார் , அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் கோபுரம் என்று பெண்கள் முன்பு சொன்னவரும் திருமாவளவன் தான் என்பதையும் நினைவு கூற கடமை பட்டுள்ளோம்..!

ஊடகம் என்பது காலத்தின் கண்ணாடி , சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் முன் கொண்டு போய் அப்படியே சேர்ப்பது தான் அறம். மேடையில் பேசும் முன்பாக என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டியது தலைவர்களின் கடமை, அதை தவற விட்டு, செய்தி வெளிட்டதற்கு தொலைக்காட்சி மீது உள் நோக்கம் கற்பிப்பது எந்தவகையில் நியாயமாக இருக்க முடியும் ?

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உலுக்கிய டபுள் மர்டர் பயங்கரம் கூட்டத்தில் போலீஸிடம் நீதிகேட்டு 
முதல் ஆளாக நின்று கதறிய கொ**காரன் சிக்கியது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies