RECENT NEWS

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

Nov 13, 2025

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

Nov 13, 2025

BIG STORIES

இறுதிச் சடங்கிற்கு ரூ.1 லட்சம்.. ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம்.. இ-மெயில் அனுப்பி விபரீதம்..! கடனால் துடி துடித்த உயிர்கள்

Oct 24, 2025 01:11 AM

450

இறுதிச் சடங்கிற்கு ரூ.1 லட்சம்.. ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம்.. இ-மெயில் அனுப்பி விபரீதம்..! கடனால் துடி துடித்த உயிர்கள்

இ-மெயில் அனுப்பி விபரீதம்..! கடனால் துடி துடித்த உயிர்கள்

தங்கள் இறுதிச்சடங்கிற்கு 1 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியதோடு, தங்களிடம் பணிபுரிந்த ஊழியர்களின் வங்கிக்கணக்கில் தலா 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக்கணக்கில் அனுப்பிவிட்டு, இரண்டு குழந்தைகளைக் கொன்ற தம்பதியர், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஈ.சி.ஆரில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் மரணத்திற்குப் பிறகு இறுதிச் சடங்கிற்கான அழைப்பை இ-மெயிலில் அனுப்பியதோடு, கணவன் -மனைவி கையெழுத்து போட்ட உருக்கமான கடிதமும் சிக்கியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்கள் லேப்டாப்புகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நீலாங்கரை அருகே, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார், சிரஞ்சீவி தாமோதர குப்தா.

சென்னை ரிச்சி தெருவில் மின்னணு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். குறிப்பாக 'சிசிடிவி' எனும் கண்காணிப்பு கேமரா விற்பனை கடை நடத்தி வந்ததாக கூறப்படும் இவர், 22 ஆம் தேதி அதிகாலை தனது மனைவி ரேவதி, மகன்கள் ரித்திக் ஹர்ஷத், தித்விக் ஹர்ஷத் ஆகியோருடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

நீலாங்கரை போலீசார் விசாரணையில் தற்கொலை கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டு அதில், கடன் பிரச்சனையால் இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது, அந்த கடிதத்தில் ‘தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் எதையும் இதற்குமேல் திருப்பி செலுத்த முடியாத காரணத்தால், சிரஞ்சீவி என்னும் நான் எனது குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்கிறோம், எங்களது இறப்பிற்கு யாரும் பொறுப்பல்ல. இதை, நான் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன்’ என எழுதப்பட்டிருந்தது.

கணவன் மனைவி இருவருமே அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதும், ஆனால் உயிரிழந்த சிரஞ்சீவி குளியலறையில் கையையும் கழுத்தையும் அறுத்துக் கொண்டு உயிரிழந்து கிடந்ததும், அவரது மனைவியும் மகன்களும் பாலித்தீன் கவரால் முகத்தை மூடிய நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

சிரஞ்சீவி மூன்று பேரையும் கொன்று விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில் உயிரை மாய்த்துக் கொண்டதற்கான கடிதத்தில் கணவன் மனைவி இருவருமே கையெழுத்துட்டு இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நான்கு பேரின் உடல்களும் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேவேளையில், டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் இந்த வழக்கில் ஓரளவு துப்பு துலங்கியுள்ளது. நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மூன்று பேருக்கும் விஷம் எதுவும் கொடுக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

அதேவேளையில், கணவன் மனைவி இருவரது இ-மெயிலில் இருந்தும் அவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு காலை 8 மணிக்கு இவர்களது மரணச் செய்தி செல்லும் வகையில், Triggered Email அனுப்பி உள்ளனர்.

அந்த இ-மெயிலில் எங்களது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த இ-மெயிலை பார்த்துவிட்டு அவரது உறவினர்கள் பலர் பதறி அடித்து செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் யாருடைய செல்போனும் எடுக்கவில்லை.

அதாவது, சேலத்தில் வசிக்கும் சிரஞ்சீவியின் மாமா முரளிக்கு, அதிகாலை சிரஞ்சீவி 1 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார்.

இது குறித்து கேட்க, சிரஞ்சீவியின் மொபைல் போனில் முரளி பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், போன் எடுக்கவில்லை. சந்தேகத்தின்படி, சாலிகிராமத்தில் வசிக்கும் உறவினர் சாய்கிருஷ்ணா என்பவரிடம், வீட்டில் சென்று பார்க்க கூறினார். அதற்குப்பிறகுதான், இந்த வீபரீத உயிரிழப்பு தெரியவந்தது என்கின்றனர் காவல்துறையினர்

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தனது தொழிலை டெவலப் செய்ய லட்சக்கணக்கில் சிரஞ்சீவி கடன் வாங்கியதாகவும், மேலும், தனக்கு கிடைத்த வருமானத்தை பிட்காயினில் முதலீடு செய்து அதில் அவர் பெரும் எண்ணிக்கையில் பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர் நெருக்கடியால் தான், இந்த முடிவை கணவன் - மனைவி இருவருமே சேர்ந்து எடுத்துள்ளதாகவும் அதே வேளையில், தன்னிடம் பணி புரியும் ஐந்து ஊழியர்களுக்கு தலா 50,000 ரூபாயை சிரஞ்சீவி வங்கி கணக்கில் அன்றைய இரவே அனுப்பிவிட்டு, சேலத்தில் உள்ள தனது உறவினருக்கு தங்களது இறுதிச் சடங்கு செலவுகளுக்காக ஒரு லட்சம் ரூபாயை அனுப்பி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தான் கடனில் சிக்கி இந்த விபரீத முடிவை எடுத்தாலும், தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு இதற்கு மேல் கடனாளியாக இருக்கக் கூடாது என தன்னிடம் இருந்த பணத்தை இறுதிச் சடங்கிற்கும், தன்னை நம்பி இருந்த ஊழியர்களுக்கும் கொடுத்துவிட்டு உயிரை விட்டுள்ளார் என அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

அதேநேரம், தாய்- தந்தையருக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் தாங்களே பெற்ற குழந்தையாக இருந்தாலும், அவர்களை கொலை செய்யும் உரிமை பெற்றோருக்கு இல்லை.

எந்தக் காரணத்துக்காகவும் குழந்தைகளை கொலை செய்வதை ஒருபோதும் நியாயப்படுத்தமுடியாது. அதுவும், அவர்களது முகத்தில் பாலித்தீன் கவரைச் சுற்றி மூச்சை இறுக்கி கொலை செய்யும் தைரியம், தன் கழுத்தையே அறுத்துக்கொள்ளும் தைரியம் இருந்த சிரஞ்சீவி தாமோதர குப்தா, வாழ்க்கையையும் அதில் வரும் பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொண்டிருக்கவேண்டும்.

சிரஞ்சீவி தாமோதர குப்தா தனது உயிரை மாய்த்துக்கொண்டாலும் அந்த குழந்தைகளை ஈவு இரக்கமில்லாமல் கொன்றதை எந்தக்காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது; மன்னிக்கவே முடியாது.

தங்களது இறுதிச்சடங்கிற்கு 1 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியிருந்தாலும், ஊழியர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அனுப்பியிருந்தாலும் அவரது மனைவிக்கு அவர் ஒரு சிறந்த கணவரும் அல்ல, பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தகப்பனும் அல்ல.

தைரியமாக வாழ்ந்துகாட்டாமல், இப்படியொரு முடிவை எடுப்பவர்கள் மீது ஒருபோதும் ‘உச்’ கொட்டி பாவப்படக்கூடாது என்கிறார்கள், விசாரணை அதிகாரிகள்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உலுக்கிய டபுள் மர்டர் பயங்கரம் கூட்டத்தில் போலீஸிடம் நீதிகேட்டு 
முதல் ஆளாக நின்று கதறிய கொ**காரன் சிக்கியது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies