முகப்பு
ஆசை ஆசையாய் திருமணம் ஆறே மாதத்தில் கொ**யான புதுமாப்பிள்ளை; கோயில் வாசலில் வைத்து கொடூரம்!
Oct 23, 2025 12:53 PM
335
ஆறே மாதத்தில் கொ**யான புதுமாப்பிள்ளை கோயில் வாசலில் வைத்து கொடூரம்..!
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், முத்தழகு என்பவரின் 34 வயது மகன் சங்கர். லாரி டிராவல்ஸ் உரிமையாளரான இவர், ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆசை ஆசையாய் திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில், இரவு தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலின் நுழைவாயில் முன்பு, கொடூர கும்பலால் சங்கர் கத்தியால் வெட்டப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால் வெட்டிச் சாய்த்துவிட்டு, அந்த கொடூர கும்பல் தப்பி ஓடிய நிலையில், தகவல் அறிந்த இளையான்குடி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, சங்கரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக இளையான்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலை கும்பலைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலைச் சம்பவம் கண்ணமங்கலம் மற்றும் தாயமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சங்கரின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இளையான்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 21 ஆம் தேதி தனது காரில் தாயமங்கலம் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த முத்துவேல் மற்றும் செல்வகுமார் ஆகியோரின் பைக் வாகனத்துடன் மோதி, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இரு தரப்புக்கும் பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. சில மணி நேரத்திற்குப் பிறகு, சங்கரை போன் மூலம் தொடர்பு கொண்டு, தாயமங்கலம் நுழைவாயில் அருகே வரச் சொல்லி, அங்கு முன்கூட்டியே காத்திருந்த சுமார் எட்டு நபர்கள் சங்கரை வெட்டிச் சாய்த்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து இளையான்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த படுகொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் முத்துவேல், செல்வகுமார், பிரேம் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சங்கரின் உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடலை வாங்க மறுத்து, “அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். குடும்பத்துக்கு நிவாரணமும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்” என்று கோரி இளையான்குடி - தாயமங்கலம் பேருந்து நிலையம் அருகே, சிவகங்கை– இளையான்குடி நெடுஞ்சாலையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், இளையான்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu