RECENT NEWS

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

Nov 19, 2025

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

Nov 19, 2025

முகப்பு

உணவு டெலிவரி நிறுவனத்தை ஏமாற்றி 2 ஆண்டுகள் "ஓசி சோறு" சாப்பிட்ட டுபாகூர்..! சிக்கியது எப்படி..?

Oct 23, 2025 12:42 PM

713

உணவு டெலிவரி நிறுவனத்தை ஏமாற்றி 2 ஆண்டுகள் "ஓசி சோறு" 
சாப்பிட்ட டுபாகூர்..! சிக்கியது எப்படி..?

உணவு டெலிவரி நிறுவனத்தை ஏமாற்றி இளைஞர்.. 2 ஆண்டுகள் "ஓசி சோறு" சாப்பிட்டு வந்தது அம்பலம்!

இருந்த இடத்திலிருந்தே பல்வேறு விதமான உணவுகளை சுவைப்பதற்கு என்றே தற்போது ஸ்விக்கி, சோமட்டோ உள்ளிட்ட பல உணவு டெலிவரி நிறுவனங்கள் நம் நாட்டில் இருந்துவருகின்றன. அப்படிப்பட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தை ஏமாற்றி, ஒருநபர் கடந்த 2 ஆண்டுகளில் 21 லட்சம் ரூபாய்க்கு உணவு வாங்கி சாப்பிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தேறி இருக்கிறது. யார் அந்த நபர்? அவர் எப்படி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தை நீண்ட நாட்களாக ஏமாற்றினார்? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.


ஜப்பானில் நகோயா நகரை சேர்ந்தவர் 38 வயது டகுயா ஹிகாஷிமோடா. இவருக்கு வேலை இல்லை.. இதனால் பணமின்றி தனது அன்றாட உணவு தேவைக்காக தவித்துவந்திருக்கிறார். தனது பக்கத்து வீடுகளில் தினமும் உணவு டெலிவரி செய்யப்படுவதை ஏக்கத்துடன் பார்த்துவந்த டகுயாவுக்கு, உடனே ஒரு யோசனை தோன்றி இருக்கிறது. அதன்படி நூதன முறையில் மோசடி செய்து தான் விரும்பும் உணவுகளை வீட்டில் இருந்தே ஓசி'யில் கடந்த 2 ஆண்டுகளில் வீட்டில் இருந்தே சுவைத்துள்ளார் டகுயா.


ஜப்பானில் demae-can என்ற பிரபல நிறுவனம் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. தனது திட்டத்தின் படி, டகுயா முதலில் அந்த நிறுவனத்தின் செயலியை தனது செல்போனில் பதிவேற்றம் செய்துகொண்டார். பின்னர் அந்த app-பை பயன்படுத்தி தனக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து, அதற்கான பணத்தையும் செயலி வழியாகவே செலுத்திருக்கிறார். பிறகு அந்த உணவுகளை டெலிவரி பாய் வீட்டுக்கு வந்து கொடுத்ததும், அதனை வாங்கி சாப்பிடும் டகுயா, அதன்பிறகு டெலிவரி நிறுவனத்தின் சேவை மையத்தை தொடர்பு கொண்டு ”நான் ஆர்டர் செய்த உணவு, இன்னும் வரவில்லை.. எனது பணத்தை திரும்ப தாருங்கள்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.

demae-can டெலிவரி நிறுவனமும் வாடிக்கையாளர்கள் தான் முக்கியம் என்ற அடிப்படையில் டகுயா ஆர்டர் செய்த உணவுக்கான பணத்தை உடனே அவருக்கு திரும்ப வழங்கிவிட்டனர். இதன்மூலம் டகுயா தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டதோடு, அதற்கு வழங்கிய பணத்தையும் மீண்டும் டெலிவரி நிறுவனத்திடம் இருந்து பெற்றுவிட்டார். இப்படியாக கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை டகுயா மோசடி செய்து சாப்பிட்டுள்ளார்.

இந்த காலக்கட்டத்தில் அவர் மொத்தம் 1,095 முறை மோசடி செய்து 3.7 மில்லியன் யென் பணத்தை திரும்ப பெற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு 21 லட்சத்து 10 ஆயிரம் என கூறப்படுகிறது. மேலும் இந்த மோசடியை அரங்கேற்ற அவர் போலியான சிம்கார்டுகள், போலி முகவரி மற்றும் போலி பெயர்களை பயன்படுத்தி உள்ளார். ஒவ்வொரு சிம் கார்டுகளை பயன்படுத்தும்போதும், டகுயா போலி முகவரியை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்து மோசடி செய்துள்ளார். அதாவது அந்த நிறுவனத்தின் app-ல் contact less delivery option என்பதை தொடர்பு கொண்டு இந்த கைவரிசையை நிகழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி இவருக்கு அந்த செயலியில் மொத்தம் 124 அக்கவுண்ட் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி டகுயா வழக்கம்போல் அந்த ஆன்லைன் உணவு நிறுவனத்தின் app-ல் சிக்கன் ஸ்டிக்ஸ் ஆர்டர் செய்து, அதனை சாப்பிட்டுள்ளார். அதனை சாப்பிட்ட பிறகு அவர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு காலில் பேசவில்லை. மாறாக சாட் செய்திருக்கிறார். வழக்கம்போல், தான் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என்று கூறி பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவருக்கு பணமும் திரும்ப வழங்கப்பட்டது.

இதையடுத்து dema-can நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவில் இருப்பவருக்கு டகுயா மீது லேசாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஆய்வு செய்தபோதுதான் டகுயாவின் மோசடிகள் அனைத்தும் தெரியவந்தது. டகுயா மொத்தம் 21 லட்சத்து 10 ஆயிரம் வரை உணவு சாப்பிட்டு பணமோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து டெலிவரி நிறுவனம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து டகுயாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த மோசடி நடவடிக்கைக்கு பிறகு, தற்போது அந்த டெலிவரி நிறுவனம் சுதாரித்துக்கொண்டது. அதன்படி ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் முகவரி, செல்போன் எண் உள்பட பிற விவரங்களை முன்கூட்டியே சரிபார்க்கும் பணியை அந்த ஆன்லைன் டெலிவரி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தை 2 ஆண்டுகள் ஏமாற்றி பல லட்சம் ரூபாய் வரை ஓசியாக உணவு சாப்பிட்ட இளைஞரின் சம்பவம் பல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்திற்கு ஒரு wakeup call ஆக அமைத்திருக்கிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஜிப் வைத்த சூட்கேஸ்.. ரூ.85 லட்சம் நகைகள் கொள்ளை போனது..! பூட்டை உடைக்காமல் அபேஸ்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies