RECENT NEWS

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

முகப்பு

DUDE.. இது லவ் இல்ல மாதிரி லிவிங் டூ கெதரில் இருந்த ஜோடி.. அடுத்தடுத்து கந்திருந்த அதிர்ச்சி..!

Oct 23, 2025 12:26 PM

92

DUDE.. இது லவ் இல்ல மாதிரி லிவிங் டூ கெதரில் இருந்த ஜோடி..
 அடுத்தடுத்து கந்திருந்த அதிர்ச்சி..!

லிவிங் டூ கெதரில் இருந்த ஜோடி.. அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி!

23 வயது ராகேஷ் பாத்ரா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் சீமா நாயக் என்ற பெண் ஒருவரும் வேலை செய்து வந்தவர். இவரும் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ராகேஷூம், சீமாவும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நட்பானார்கள். பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.

இதையடுத்து, ஜிகினி அருகிலுள்ள கல்லுபாலு என்ற கிராமத்தில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 2 பேருமே தங்கியிருந்தனர்.. திருமணம் செய்யாமலேயே லிவிங் டூ கெதர் பாணியில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். எனினும் இருவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு எழ, அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில், காலையில் நீண்ட நேரமாகியும் ராகேஷின் வீடு திறக்கப்படவில்லை..

தீபாவளி நேரத்தில் ராகேஷ், சீமா இருவரையுமே ஒருநாள் முழுக்க வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ராகேஷின் செல்போன் எண்ணிற்கு கால் செய்துள்ளனர்.. நீண்ட நேரம் ரிங் சென்றும், ராகேஷ் போன் எடுக்கவில்லை.

இதனால் மேலும் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ராகேஷ் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது சீமா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதையும், அருகிலேயே ராகேஷூம் இறந்துகிடப்பதும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராகேஷ் மற்றும் சீமா ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுத்தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், 10 நாட்களுக்கு முன்பு தான் ஜிகினி பகுதியில் வாடகை வீட்டுக்கு 2 பேரும் குடிவந்துள்ளார்கள். இருவருமே ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தாலும், பண பிரச்சனை காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதற்கிடையே செக்யூரிட்டியான ராகேஷூக்கு மதுப்பழக்கம் அதிகமாக ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ராகேஷ் குடிப்பதற்கு பணம் கேட்டதாகவும், இதனால்தான் காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இரவு சீமா தூங்கிய பின்பு ராகேஷ் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துகொண்டிருக்கிறார். அதிகாலை தூங்கி எழுந்த சீமா, காதலன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீமா, என்ன செய்வது என்று அறியாமல் அவரும் தூக்கீட்டு உயிரை மாய்த்துகொண்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுள்ளது..

இருப்பினும் இருவரது பிரேத பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான முழுக்காரணம் உறுதியாக சொல்ல முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரே வீட்டில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம் ஜோடி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவி தலையை வெட்டிய  'சைக்கோ' கணவன்..!  மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies