RECENT NEWS

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

Nov 19, 2025

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

அமெரிக்காவில் அடுத்தாண்டு ஜூனில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர்

Nov 19, 2025

BIG STORIES

அம்மா அம்மா... நீ எங்க அம்மா...தாலி கயிற்றை இறுக்கி பயங்கரம்.. அப்பா செல்லங்கள் அட்டகாசம்..!

Oct 23, 2025 02:21 AM

364

அம்மா அம்மா... நீ எங்க அம்மா...தாலி கயிற்றை இறுக்கி பயங்கரம்.. அப்பா செல்லங்கள் அட்டகாசம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தாலிக்கயிற்றை வைத்து தாயின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக 14 வயது சிருவன் கைது செய்யப்பட்டுள்ளான்... கடலூர் அருகே தாயை கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்துள்ளான் செல்ல மகன்.. எதற்காக நிகழ்ந்தது இந்த கொடூர சம்பவம்.. சிறுவர்கல் திசைமாறக்காரணம் யார் என்பது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கீழக்குப்பம்வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். லாரி ஓட்டுநரான இவருக்கும் மகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே குணசேகரன் லாரி ஓட்ட சென்றால், வீட்டிற்கு சில நாட்களுக்குப் பின்னர் தான் வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. அப்படி, வீட்டிற்கு வந்து செல்லும்பொழுது வீட்டிற்கு தேவையான பொருட்களும் தனது மகன்களுக்கு தேவையான தின்பண்டங்களையும் அதிக அளவில் வாங்கி வந்து கொடுத்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், தீபாவளிக்காக தனது மனைவி மற்றும் மகன்களுக்கு புத்தாடை வாங்கி வந்து கொடுத்ததோடு மகேஸ்வரியை புத்தாடை அணிந்து கொள்ளுமாறு கணவன் குணசேகரன் கூறி உள்ளார். ஆனால், மகேஸ்வரி புத்தாடையை அணியவில்லை. இதனால், அவர்களுக்குள் 19ஆம் தேதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது மகேஸ்வரியை குணசேகரன் கடுமையாக அடித்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, மகேஸ்வரி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கோபித்துக் கொண்டு வயலுக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரியை, அவர் சென்ற விவசாய நிலம் பகுதிக்கு தேடிச் சென்று பார்த்தபோது, அங்குள்ள விவசாய நிலத்தில் மூச்சு பேச்சில்லாமல் கிடந்துள்ளார், மகேஸ்வரி.

இதனைப்பார்த்து, அக்கம்பக்கத்தினர் கதறி அழுததோடு இதுகுறித்து மகேஸ்வரியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே, திருநாவலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகேஸ்வரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், மகேஸ்வரியின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகேஸ்வரி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாக கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது மகேஸ்வரி உடல் அருகே கிடந்த சட்டை பட்டன்களை எடுத்த போலீசார், அவது கணவன் குணசேகரன் மீது சந்தேகம் அடைந்தனர். அன்று குணசேகரனால் மகேஸ்வரி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, குணசேகரன் அணிந்திருந்த சட்டையில் இருந்த பட்டன்கள் அனைத்தும் இருந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குணசேகரன் அணிந்திருந்த அதே பிராண்ட் சட்டை தனது மகன்களுக்கும் வாங்கி வந்து கொடுத்தது தெரியவந்தது. இதனால், அவரது இரண்டு மகன்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களது 14 வயது சிறுவனான இரண்டாவது மகன், அணிந்திருந்த சட்டையில் இருந்த இரண்டு பட்டன்கள், இல்லாததால் சந்தேகம் அடைந்த போலீசார் 14 வயது சிறுவனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுவன் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சி அடையவைத்தது. சிறுவன் கூறும்போது, “அன்றைய தினம் எனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அம்மாவை அப்பா அடித்தார். அதனை நான் தடுக்கவில்லை, அவரை கேள்வி கேட்கவில்லை எனக் கூறி அம்மா என்னை அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அம்மா நடந்து சென்ற போது பின் தொடர்ந்து சென்று, வயல்வெளி பகுதியில் கீழே தள்ளி அவரது கழுத்தில் கால் வைத்து மிதித்து கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதாவது, தாய் மகேஸ்வரியை தந்தை குணசேகரன் கடுமையாக தாக்கும்போது இரண்டாவது மகன் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்துள்ளார். அதன்பின், குணசேகரன் வெளியே சென்றதும், “அவர் என்னை அடித்தபோது ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாய்? நீ உனது அப்பாவுக்கு ஆதரவாக இருக்கிறாயா?” என கேட்டு மகேஸ்வரி தனது இரண்டாவது மகனை கோபமாக பேசி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும், மூச்சுத்திணறிய தாய் மகேஸ்வரியின் தாலியை வைத்து கழுத்தை நெறித்து கொன்றதாகவும் செல்லமகன் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

லாரி ஓட்டுநரான குணசேகரன் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும்போதெல்லாம் நிறைய தின்பண்டங்களை வாங்கிவருவார். இரண்டு பிள்ளைகள் மீதும் பாச மழையை மொழிவார். அவர்களது படிப்பு, செயல்பாடுகள் குறித்து கண்டுகொள்ளாமல எல்லை மீறி செல்லம் கொஞ்சுவார். இதனால், இரண்டு பிள்ளைகளுமே ‘அப்பா செல்லம்’ என இருந்துள்ளனர்.

ஆனால், ‘குடித்துவிட்டு வரவேண்டாம். தேவையில்லாமல் செலவு செய்யவேண்டாம். சேமிக்க வேண்டும். சம்பளத்தை குடித்து செலவு செய்யாமல் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுங்கள்’ என சண்டைபோடும் மனைவி மகேஸ்வரியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், குணசேகரன் கோபத்தில் உன்னை கொலை செய்யப்போகிறேன் என மகேஸ்வரியை பார்த்து ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும், தனது பிள்ளைகள் முன்னால் தன்னை ஒரு ‘தவமாய் தவமிருந்து’ பட ராஜ்கிரன் போலவும், ‘அப்பா’ பட சமுத்திரகனிபோலவும் காண்பித்துக்கொள்ளும் குணசேகரன், மனைவியை வில்லிபோல் சித்தரித்தாக கூறப்படுகிறது. இதனால், என்ன காரணத்துக்காக அப்பாவை அம்மா கண்டிக்கிறார் என்பதை அறியாத பிள்ளைகள், எப்போது பார்த்தாலும் அப்பாவை அம்மா கொடுமைப் படுத்துகிறார் என்ற மனநிலையில் இருந்துள்ளனர். இதன் விளைவுதான், தந்தையால் தாக்கப்படும்போது தட்டிக்கேட்காத இரண்டாவது மகன், தன்னை தாக்கிய தாயை பின்தொடர்ந்து சென்று, கழுத்தை நெறித்து படுகொலை செய்யக்காரணம் என அதிர்ச்சியூட்டுகிறார்கள், விசாரணை அதிகாரிகள்.

இதையடுத்து, மகேஸ்வரியின் சந்தேக மரணம் குறித்த வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார், சிறுவனை கைது செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

குணசேகரனின் குடும்ப வன்முறையால் தனது மனைவியை இழந்துவிட்டார். இரண்டாவது, செல்ல மகன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைக்கப்பட்டுவிட்டார். குழந்தை வளர்ப்பு என்பது செல்லம் கொஞ்ச வேண்டிய விஷயத்திற்கு செல்லம் கொஞ்சுதல், கண்டிக்க வேண்டிய விஷயத்திற்கு கண்டித்தல் என அறிவுரைகள், நெறிமுறைகள் கூறி சரியான பாதையை நோக்கி வளர்க்க வேண்டும். இல்லையெனில், அது குடும்பத்தையே சிதைத்துவிடும் என்கிறார்கள், விசாரணை அதிகாரிகள்.

இதே போல கடலூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேரி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சின்னசெட்டித்தெருவில் வசிப்பவர் விஜயா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிபவர் நடராஜ். இவரது மனைவி பெயர் கோமதி (40). இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டிற்குள் பின்பக்க கதவு வழியாக புகுந்த இரு மர்மநபர்கள் வீச்சரிவாளுடன் வந்து வீட்டிற்குள் புகுந்து நடராஜனின் மனைவி கோமதியை (40) சரமாரியாக கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர் தலைமையில் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது படுகாயமுற்ற கோமதியின் 14 வயது இளைய மகன் , நன்றாக படித்து 90 சதவீதம் வரை நல்ல மதிப்பெண் பெற்றாலும் , தாய், எல்லா நேரமும் படிக்க சொல்லி ,அடித்து துன்புறுத்தியாக கூறப்படுகின்றது. அதனால் கோபமுற்ற சிறுவன் தூங்கிக்கொண்டிருந்த தனது தாயை கத்திரிகோலால் தாக்கியுள்ளான். பதிலுக்கு தாயும் அவனைத் தாக்கியுள்ளார்.

அந்த நேரத்தில் ஏற்பட்ட கைகலப்பில் அச்சிறுவன் பேப்பர் கட் செய்வதற்காக வைத்திருந்த கத்திரிக்கோலால் தனது தாயை குத்தியது என தெரியவந்துள்ளது. தாயிடம் விசாரித்த போது சம்பவம் உண்மை என்றும் தனது மகன் மீது நடவடிக்கை வேண்டாம் என்றும் கூறிவிட்டார். இருப்பினும் சிறுவனின் தந்தை நடராஜன் அளித்த புகாரின் பேரில் காய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, பெற்றோர்கள் அவனுக்கு உளவியல் சிகிச்சை அளிக்க உள்ளனர் என கூறப்படுகிறது.

14 வயதில் சிறுவனுக்கு என்ன தெரியும் ? குழந்தை குனம் என்று சட்டம் சொன்னாலும், செல்போன் சமூக வலைதளங்களின் மூலம் வன்முறையாளர்களாக சிறுவர்கள் திசைமாறிச் செல்வதையே இந்த இரு சம்பவங்களும் சமூகத்திற்கு உணர்த்துகின்றது.

பாசத்தில் செய்தாலும், நேசத்தில் செய்தாலும், ஆவேசத்தில் செய்யும் குற்றம் கேடு தரும்..!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஜிப் வைத்த சூட்கேஸ்.. ரூ.85 லட்சம் நகைகள் கொள்ளை போனது..! பூட்டை உடைக்காமல் அபேஸ்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies