தமிழ்நாடு
விளைநிலங்களில் தேங்கிய மழைநீரால் விவசாயிகள் வேதனை.!
Oct 22, 2025 02:34 PM
52
விளைநிலங்களில் தேங்கிய மழைநீரால் விவசாயிகள் வேதனை.!
மயிலாடுதுறை
சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழையினால் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடலூர்
விருத்தாசலம் அருகே சு.கீணனூர் கிராமத்தில் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர் மழையால் சேதம் அடைந்துள்ள நிலையில், வட்டாட்சியர் டிராக்டரில் சென்று நேரில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே ஆர். காவனூரில் வடகிழக்கு பருவ மழையால் வயல்களில் மழை நீர் தேங்கியதால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் 40 நாட்களே ஆன சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்த வரும் கனமழையினால் தியாகராஜபுரம் பூட்டை அரசம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திருச்சி
திருச்சியில் கடந்த 4 தினங்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக பனையபுரம், உத்தமர்சீலி கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் மழைநீரில் மூழ்கி இருப்பது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu