முகப்பு
"பொதுப்பணித்துறையில் ஒரு அயோக்கியன் இருக்கான்" யாரை சொல்கிறார் காங். தலைவர்..?!
Oct 22, 2025 12:13 PM
489
‘என்னை கேட்காமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதா’ ? காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை செயல் சரிதானா ?
சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் செம்பரம் பாக்கம் ஏரி, 2015 ஆண்டு ஏற்பட்ட பெரு மழை வெள்ள பாதிப்பிற்கு பின்னர் மழை காலங்களில் மக்களை அச்சுறுத்தும் சொல்லாக மாறிபோய்விட்டது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலைக்கு வந்ததால் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதற்கட்டமாக செவ்வாய்கிழமை மதியம் 100 கன அடி நீர் திறந்து விட்டனர்.
தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக புதன் கிழமை காலையில் நீர் திறப்பு 500 அடியாக உயர்த்தப்பட்டது
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தன்னிடம் தெரிவிக்காமல் எப்படி ஏரியில் தண்ணீர் திறந்து விட்டீர்கள் ? என்று பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார், மூன்று ஆண்டுகள் நான் தான் திறந்து விட்டேன். கடந்த ஆண்டு கூட என்னிடத்தில் சொல்லவில்லை ஏன் ? என்றார் செல்வபெருந்தகை
பொதுப்பணித்துறையில் அயோக்கியன் ஒருவன் உட்கார்ந்து இருப்பதாக ஆவேசமான செல்வபெருந்தகை
“நீங்களே மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டால், எதற்கு அரசாங்கம்? என்று ஆவேசமானார் செல்வ பெருந்தகை
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu