RECENT NEWS

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

Nov 13, 2025

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

Nov 13, 2025

முகப்பு

ஓட ஓட விரட்டி மாமனார் செய்த வெறிச்செயல்.. கர்ப்பிணி பெண்ணிற்கு நேரக்கூடாத கொடூரம்..!

Oct 22, 2025 09:46 AM

454

ஓட ஓட விரட்டி மாமனார் செய்த வெறிச்செயல்.. கர்ப்பிணி பெண்ணிற்கு நேரக்கூடாத கொடூரம்..!

சாதி மறுப்பு திருமணம் செய்த காதலர்கள் ஓட ஓட விரட்டி கொன்ற மாமனாரின் வெறிச்செயல்..

தெலங்கானா மாநிலம் கொமரம் பீம் ஆசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ள கெர்ரே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். டிரைவர் வேலை பார்த்து வரும் சேகர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ராவணி பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு சேகரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் ராவணியை உயிருக்கு உயிராக விரும்பிய சேகர், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2024 அக்டோபரில் ராவணியை திருமணம் செய்து கொண்டார்.

சேகர் பழங்குடியினர் சமூகப் பெண்ணை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் அவரை ஏற்க மறுத்துள்ளனர். இதனால், சேகர், தனது காதல் மனைவி ராவணியின் வீட்டிலேயே தங்கியுள்ளார். இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியாக ராவணி இருந்திருகிறார்.. இவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாள் மற்றும் தலை தீபாவளி ஒன்றாக வருவதால், அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

இதற்காக சேகர் தன்னுடைய மாமியார், மாமனாருடன் சேர்ந்து சமையல் செய்வதற்கு தேவையான விறகு சேகரிக்க காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.. இதனை சேகரின் அப்பா சாத்தையா கவனித்துள்ளார். அனைவருமே காட்டுக்குள் வந்துவிட்டதால், மருமகள் ராவணி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையும் தெரிந்து கொண்டு, அங்கு சென்றிருக்கிறார்.

தனது மாமனார் திடீரென வாசலில் வந்து நின்றவுடன், மனம் மாறி வந்திருப்பதாக நினைத்து ராவணி மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.. நிறைமாத கர்ப்பிணி என்பதாலும், தலை தீபாவளி மற்றும் முதலாம் ஆண்டு திருமண நாள் என்பதாலும், வாழ்த்து சொல்ல வந்திருப்பதாக நினைத்து, வீட்டிற்குள் மாமனாரை அழைத்திருக்கிறார்.

அப்போது தான் மாமனாரின் கொடூர எண்ணம் ராவணிக்கு தெரியவந்தது. ராவணி குடிக்க தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது அவரை பின்தொடர்ந்த சாத்தையா, திடீரென மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து மருமகளை வெட்ட பாய்ந்தார்.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராவணி, உடனே வெளியே ஓட முயற்சித்தார். அதற்குள் ராவணியின் கழுத்தின் பின் பகுதியில் கோடாரி வெட்டு விழுந்தது.

ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்துக் கொண்டிருந்த ராவணி, மாமனார் சாத்தையாவிடம் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியிருக்கிறரர்.. ஆனால், சாதி வெறி தலைக்கேறிய சாத்தையா, கர்ப்பிணி என்றும் பார்க்காமல் ராவணியை கொடூரமாக கோடாரியால் வெட்டி கொலை செய்தார்..

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து காட்டுக்குள்ளிருந்து பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த சேகர், ராவணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமனார் சாத்தையாவை கைதுசெய்து அவரிடம் மேலும் விசாரனை நடத்திவருகின்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்த காதலர்களை, ஒரு ஆண்டு கழித்து வஞ்சம் தீர்த்த இந்த சம்பவம் தெலங்கானாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உலுக்கிய டபுள் மர்டர் பயங்கரம் கூட்டத்தில் போலீஸிடம் நீதிகேட்டு 
முதல் ஆளாக நின்று கதறிய கொ**காரன் சிக்கியது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies