RECENT NEWS

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

Nov 17, 2025

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

Nov 17, 2025

முகப்பு

மீண்டும் ஒரு ப்ளு டிரம் கொலை..! ஊரையே நடுங்க வைத்த.. கொலையின் பின்னணி என்ன?

Oct 22, 2025 09:43 AM

299

மீண்டும் ஒரு ப்ளு டிரம் கொலை..! ஊரையே நடுங்க வைத்த.. 
கொலையின் பின்னணி என்ன?

கொன்று கூலாக தீபாவளி கொண்டாடிய கணவன்.. ஊரையே நடுங்க வைத்த கொலையின் பின்னணி

மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, டிரம்மில் அடைத்து மண்ணில் புதைத்த கணவன்.. உத்தரபிரதேச மாநில ப்ளு டிரம் கொலை போன்று, இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிவந்த மர்மம்.. ஊரையே நடுங்க வைத்த கொலையின் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் 39 வயது சிலம்பரசன். கூலி தொழில் செய்து வந்த சிலம்பரசனுக்கும், பிரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் திடீரென சில நாட்களாக பிரியா வீட்டில் இல்லை. இதுகுறித்து சிலம்பரசனிடம் அக்கம் பக்கத்தினர் கேட்டிருக்கின்றனர். அதற்கு அவள் கோபித்துக் கொண்டு, அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பிரியாவின் சகோதரர், சிலம்பரசனின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது பிரியா வீட்டில் இல்லாததால், அவரது சகோதரர் பிரியா எங்கே ? என சிலம்பரசனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஏதும் சொல்லாமல் மௌனமாக நின்று இருக்கிறார். உடனே சந்தேகமடைந்த பிரியாவின் சகோதரர் மீண்டும் மீண்டும் கேட்க, அப்போதுதான் அந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சிலம்பரசன், மனைவி பிரியாவின் நடத்தையில் எப்போதும் சந்தேகம் உடையவராகவே இருந்திருக்கிறார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிவந்துள்ளது. இதனால் அவ்வப்போது பிரியா, தனது தாய் வீட்டிற்கு சென்று விடுவார். பின்னர் பிரியாவை சமாதானம் செய்து மீண்டும் சிலம்பரசன் வீட்டிற்கு அழைத்துவருவார். கணவர் சிக்கிரம் திருந்திவிட்டார் என பிரியாவும் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிரியா நடத்தையில் மீண்டும் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிலம்பரசம் பிரியாவிடம் சண்டையிட்டு அவரை முரட்டு தனமாக தாக்கிருக்கிறார். அதில் பிரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, வெளியே சொல்ல பயந்துப்போன சிலம்பரசன், வீட்டில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த டிரம்மை காலி செய்து, அதில் இறந்த மனைவி பிரியாவின் சடலைத்தை அடைத்து வைத்தார். பின்னர் இரவொடு இரவாக வண்டியில் டிரம்மை எற்றிகொண்டு, பாலம் அருகே பள்ளம் தோண்டி, பிரியாவை புதைத்துவிட்டு, பின் ஒன்றும் தெரியாதது போல் வீட்டில் இருந்துவந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பிரியாவை சில நாட்களாக வீட்டில் இல்லாததால், அக்கம் பக்கத்தினர் கேட்க, அவர் தாய் வீட்டிற்கு சென்றதாக சிலம்பரசன் கூறியதால், அக்கம் பக்கத்தினருக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை. இதையடுத்து தான் தீபாவளி பண்டிகைக்காக பிரியாவின் சகோதரர் அவரது வீட்டிற்கு வந்து தனது அக்கா எங்கே என கேட்டிருக்கிறார். அதற்கு சிலம்பரசன், உன் அக்கா நடத்தை சரியில்லாத காரணத்தால் அவளை அடித்து கொலை செய்து புதைத்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் சகோதரர் இதுகுறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிலம்பரசனை பிடித்து நடத்திய விசாரணையில் மனைவியை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து சிலம்பரசனை பிடித்து புதைத்ததாக கூறப்பட்ட எலவூர் ஏழு கண் பாலம் அருகே உள்ள பகுதியில் சடலத்தை தோண்டி எடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்காக வீட்டில் கறி வாங்கி சமைத்து, அதனை எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி சப்பிட்டு இருக்கும்போதுதான் போலீசாரிடம் சிலம்பரசன் பிடிப்பட்டிருக்கிறார். மனைவியை கொன்ற பின்னர் அவரது உறவினர்கள் யாரும் தொடர்பு கொள்ள கூடாது என்பதற்காக, அனைவரின் செல்போன் என்னையும் அவர் பிளாக் செய்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. பெற்ற தாய் கோபத்தில் எங்கையோ சென்றுவிட்டார் என நினைத்து தந்தையுடன் இருந்த அந்த இரண்டு பிஞ்சுகளும், தந்தை தான் கொலை செய்தார் என்ற செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் கணவனை கொன்று, மனைவி ப்ளு டிரம்மில் புதைத்து வைத்தது போன்றே, தற்போது மனைவியை கணவன் கொலை செய்து டிரம்மில் எடுத்து வந்து புதைத்துவிட்டு, இரண்டு மாதங்கள் வரை ஏதும் தெரியாதது போல் நாடகமாடிய சம்பவம் அந்த ஊரையே அதிர்ச்சியில் உரைய வைத்திருக்கிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தபால் நிலைய  பார்சலை திருடி தாய்க்கு சேலை  ‘கிப்ட்’ .. சீரியல் கொள்ளையன் கைது..! ஒரே இரவில் தொடர் கைவரிசை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies