BIG STORIES
மனைவியை கொன்று தீபாவளி கொண்டாடிய சைக்கோ கணவன்..! இட்லி வித் மட்டன் குழம்பு படையல்..
Oct 22, 2025 01:53 AM
323
குக்கரால் தலையில் தாக்கியதால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை, சமாதனப்படுத்தி அழைத்து வந்து கொன்று புதைத்த சைக்கோ கணவனை போலீசார் கைது செய்தனர். தட்டு நிறைய இட்லியுடன் மட்டன் குழம்பு வைத்து தீபாவளி படையல் போட்டவர் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் சிலம்பரசன். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி அன்று பிரியாவின் சகோதரர் கையில் பட்டாசு மற்றும் ஸ்வீட் பாக்ஸுடன் தனது சகோதரியை பார்க்க சென்றுள்ளார்.
வீட்டில் தட்டு நிறைய இட்லியை அம்பராமாய் அடுக்கி அதில் மட்டன் குழம்பு ஊற்றி சாமிக்கு படையல் போட்டது போல அமர்ந்து சிலம்பரசன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. “மச்சான், அக்காவை, எங்கே என்று கேட்ட போது, சூடான சிலம்பரசன், உங்க வீட்டுக்கு வந்திருப்பான்னு நினச்சேன் அங்கு வரலையா ?” “ அப்படீன்னா உங்க அக்கா ஓடிப்போயிருப்பா, என்று போதையில் ஆவேசமாக பேசி அவரை வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகின்றது.
அக்கம் பக்கத்து வீட்டாரிடம், விசாரித்த போது, தனது மனைவி பிரியா , கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றிருப்பதாக சிலம்பரசன் கூறியது தெரியவந்தது. இதனால், பிரியா மாயமான விவகாரத்தில் ஏதோ மர்மம் உள்ளது என்பதை உணர்ந்து. கும்மிடிப்பூண்டி போலீசாரிடம் பிரியாவின் சகோதரர் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து தட்டு நிறைய இட்லியுடன் தீபாவளியை குடியும் கும்மாளமுமாக கொண்டாடிய சிலம்பரசனை அழைத்துச்சென்று விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
திருமணமான நாளில் இருந்தே பிரியாவின் நடத்தை சம்பந்தமாக சந்தேகித்து அடித்து உதைப்பதை சிலம்பரசன் வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. அதே போல குக்கர் மூடியால் தாக்கி காயப்படுத்தியதால் , கோபித்துக் கொண்டு பிரியா, தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் சில வாரங்கள் கழித்து காயங்கள் ஆறிய பின்னர் அவரை சமாதானப்படுத்தி சிலம்பரசன் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக பிரியா வேறு யாருடனோ செல்போனில் பேசியதாக சந்தேகப்பட்டு சிலம்பரசன் தாக்கியதாகவும், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அவர், பிரியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது. உயிரிழந்த மனைவியின் உடலை ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து மறைத்து வைத்துள்ளார்.
அக்கம்பக்கத்து வீட்டாரிடம், தனது மனைவி மீண்டும் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறிய சிலம்பரசன் இரு தினங்கள் கழித்து , டிரம்முடன் மனைவி உடலை , பைக்கில் எடுத்துச்சென்று அருகே ஏழுகண் பாலம் அருகே குழி தோண்டி புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பாக கொல்லப்பட்ட மனைவியை புதைத்த இடத்தை போலீசாரிடம் சிலம்பரசன் அடையாளம் காட்டினார். அங்கு தடயவியல் நிபுணர்களை அழைத்துச்சென்று வருவாய்துறையினர் உதவியுடன் ப்ரியாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் பந்தல் அமைத்து அந்த சடலத்தை பிணகூறாய்வு செய்தனர். சகதி நிறைந்த அந்த பகுதியில் இருந்து டிராக்டரில் ஏற்றி சிலம்பரசனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
சிலம்பரசனை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் மனைவியை கொலை செய்ததை சிலம்பரசன் தாமாக ஒப்புக் கொள்ளவில்லை என்றால் போலீசாரால் எளிதில் கண்டு பிடித்திருக்க இயலது என்றும், ஆவேசமாக பேசுவதாக நினைத்து போதையில் அவன் உளறியதால் இந்த கொலை சம்பவம் அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu