உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025
BIG STORIES
உயிரை பறித்த உயிர்த்தோழி!.. பக்கத்து வீட்டில் ‘ஜகன் மோகினி’.. மோப்ப நாய் கொடுத்த துப்பு..!
Oct 19, 2025 02:08 AM
413
வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்ற அக்கம் பக்கத்தினர்.. உடல் முழுவதும் தீக்காய்த்துடன் மீட்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தில் அதிர்ச்சியடைந்தனர் போலீசார். என்ன நடந்தது? ஒட்டுமொத்த கேரளாவையே அதிர்ச்சியடைய வைத்த அந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள கிழ்வாய்ப்பூரைச் சேர்ந்தவர் 61 வயது லதாகுமாரி. கணவருடன் வசித்து வந்த இவர், அரசு சுகாதாரத்துறை சார்ந்த சமூக நலப்பணியில் ஈடுபட்டுவந்தார்.
இந்த நிலையில் இவரது கணவர் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்து லதாவின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. அதனைக் கேட்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் அவர் மீட்பதற்காக வீட்டின் அருகே சென்றுள்ளனர்.
ஆனால் லதாவின் வீட்டின் கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்த அக்கம்பக்கத்தினர், பலத்த தீக்காயங்களுடன் லதாவை மீட்டு , உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், லதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது லதா வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போய் உள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், கொள்ளையளர்கள் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு லதாவை எரித்துக் கொள்ள முயற்சி செய்திருக்கலாம் என நினைத்தனர்.
அதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த லதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது லதா கூறிய வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. தன்னை எரிந்து கொலை செய்ய முயற்சித்தது தனது தோழியும், பக்கத்து வீட்டில் இருக்கும் சுமய்யா தான் என லதா தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, சுமய்யா வீட்டிற்கு விரைந்தனர். அப்போது போலீசாருக்கு மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. ஆம், சுமய்யா ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவி என்பது தெரியவந்தது... அதைத்தொடர்ந்து சுமய்யாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் லதாகுமாரியை கொலை செய்ய முயற்சி செய்ததை சுமய்யா ஒப்புக்கொண்டார்..
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமய்யா பங்குச் சந்தையில் மிகவும் ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். இதனால் அவர் ஆர்வ மிகுதியில் அதிக முதலீடுகளை செய்த நிலையில், பெரும் நட்டத்தை சந்தித்திருந்தார்.
இதுகுறித்து அவரது கணவரிடம் மறைக்க நினைத்த சுமய்யா, அதனை ஈடு செய்ய மொபைல் லோன் ஆப்ஸ் மூலம் கடனும் பெற்றிருந்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை அடைக்க வேண்டுமென்ற நெருக்கடியில் தவித்து வந்திருக்கிறார்.
அப்போது தான் தன்னுடன் நெருங்கி பழகிவந்த பக்கத்துவீட்டு தோழி லதாகுமாரியிடம் உதவி கேட்க முடிவு செய்திருக்கிறார் சுமய்யா. அதைத்தொடர்ந்து லதா வீட்டிற்கு சென்ற சுமய்யா, தனக்கு 5 லட்சம் ரூபாய் பணம் வேண்டுமென கேட்டிருக்கிறார்.
அதற்கு லதா, அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என கூறி இருக்கிறார். அதற்கு உடனே சுமய்யா, ”சரி அப்படி என்றால் உன்னுடைய நகைகளை கொடு, நான் அடமான வைத்துவிட்டு திரும்ப தந்துவிடுகிறேன்” என கூறியிருக்கிறார்.
ஆனால் லதா அதனையும் மறுத்திருக்கிறார். இதனால் கடும் கோபமடைந்த சுமய்யா, லதாவை தாக்கி அவரிடமிருந்த நகைகளை சுருட்டி இருக்கிறார். உடனே லதா கூச்சலிடவே, தான் ஏற்கனவே கையில் எடுத்துவந்த மண்ணென்னையை அவர் மீது ஊற்றி பற்ற வைத்துவிட்டு, பின் வீட்டின் கதவையும் வெளியே பூட்டு விட்டு தப்பிசென்றிருக்கிறார்.
லதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரும்போது, ஏதும் தெரியாததுபோல் சுமய்யாவும் அவர் வீட்டின் அருகே வந்து நின்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சுமய்யா வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில், அவர் திருடிய தங்க நகைகள் அனைத்தும், அவர் வீட்டின் கழிப்பறை ஃப்ளஷ் டேங்கில்தான் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தும் மீட்கப்பட்ட நிலையில், சுமய்யாவை போலீசார் கைதுசெய்தனர்.
இதற்கிடையே சிகிச்சையில் இருந்த லதாகுமாரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் சுமய்யாவின் கணவருக்கும் இந்தச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது. தற்போது சிறையில் இருக்கும் சுமய்யாவிடம் மேலும் போலீசார் விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
பணத்திற்காக உயிராக பழகிய பக்கத்துவிட்டு பெண்ணை, அவரது தோழியே இரக்கம் இன்றி கொலைச் செய்த சம்பவம் கேரள மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் நகை அணியும் பழக்கம் கொண்ட தனியாக வசிக்கும் பெண்கள் அறிமுகம் இல்லாதவர்களிடமும், பக்கத்து வீட்டில் வசிக்கின்ற நடவடிக்கை சரியில்லாத பெண்களிடமும் உஷாரக இருக்க வேண்டும். அப்படிபட்டவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்..!
திட்டமிட்டு செய்தாலும்... திடீரென்று செய்தாலும் ... குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu