முகப்பு
"ம.பியில் குழந்தைகள் இறந்ததற்கு அந்த மாநில மருந்து தரக் கட்டுப்பாளர்களே காரணம்" - மா.சுப்பிரமணியன் விளக்கம்
Oct 17, 2025 03:12 PM
31
இருமல் மருந்து விவகாரம் - சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரீஃப் இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்ததற்கு அந்த மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டாளர்களே காரணம் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இருமல் மருந்து விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அவர், மத்திய பிரதேசத்தில் இருந்து அக்டோபர் ஒன்றாம் தேதி தகவல் வந்ததாகவும், அன்று மாலையே சம்பந்தப்பட்ட மருந்தை விற்க வேண்டாம் என தமிழகத்தில் உள்ள மருந்தகங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு விரைந்து செயல்பட்டதால்தான், ஸ்ரீசன் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அந்த நிறுவனம் தயாரித்த 126 மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 397 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இயங்குவதாகவும் அவற்றின் மூலம் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஏற்றுமதி நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu