BIG STORIES
வெளியானது வேட்பாளர் பட்டியல்.. எந்தெந்த தொகுதிகளில் யார் யார்?.. பா.ஜ.க. போட்ட பக்கா ப்ளான்... கட்சிக்குள் சில அதிருப்திகள்!
Oct 15, 2025 05:19 AM
166
எந்தெந்த தொகுதிகளில் யார் யார்?.. பா.ஜ.க. போட்ட பக்கா ப்ளான்...
பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது, அங்கு முதலமைச்சராக இருப்பவர் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார்.
இவர், மீண்டும் முதலமைச்சராகி விட வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். இச்சூழலில் தான் சில நாட்களுக்கு முன்பு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது தொடர்பான தகவல் வெளியானது.
அதில் பாஜக 101 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளிலும், உபேந்திரா குஷ்வேகா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதுவரை, பீகாரில் பாஜக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததில்லை. கூட்டணி கட்சிகள் மூலம் மட்டுமே அங்கு பாஜக அதிகாரம் செலுத்தி வருகிறது.
இந்தநிலையில் தான், இந்த முறை நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிலைபடுத்த வேண்டாம் என்ற நினைப்பில், பாஜக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தொடர்ந்து நிதிஷ் குமார் முதலமைச்சராக இருப்பதால், அவர்மீது இளைஞர்களிடம் அதிகமான அதிருப்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, பாஜக சரிசமான தொகுதிகளை பிரித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, நிதிஷ் குமாருக்கு கொடுக்கப்பட்ட 101 தொகுதிகளில் அவர் சில தொகுதிகளில் அவரது கட்சியினர் தோல்வி அடைந்தால் கூட, தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் நிதிஷ் குமார் கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால், மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்து விடலாம் என்று ப.ஜ.க. பக்கா ப்ளான் போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 101 இடங்களில் 71 இடங்ளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது, அதில் 71 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் அக்டோபர் 14 ஆம் தேதி அறிவிப்பில் உள்ளன. மீதமுள்ள 30 தொகுதிகளுக்கான பெயர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
பாஜக தேசிய துணை முதல்வர்கள் சம்ராட் சௌதரி மற்றும் விஜய் சிங்கா ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சம்ராட் சௌதரி தாராபூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்; விஜய் குமார் சிங்கா லக்ஷிசரை (Lakhisarai) தொகுதியில் இருந்து களமிறங்குகிறார்.
பாஜகவால் அறிவிக்கப்பட்ட மற்ற குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் டானாபூரில் இருந்து மூத்த தலைவர் ராம் கிரிபால் யாதவ், கயாவில் இருந்து பிரேம் குமார், கதிஹாரில் இருந்து முன்னாள் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், சஹர்சாவில் இருந்து அலோக் ரஞ்சன் ஜா மற்றும் சிவனில் இருந்து மங்கள் பாண்டே ஆகியோர் அடங்குவர்.
பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில், மாநில அமைச்சர்கள் நிதிஷ் மிஸ்ரா, ஜான்ஜர்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார். ஷ்ரேயாசி சிங், ஜமுய் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம்பெறாத தலைவர்களில் சட்டமன்ற சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவும் ஒருவர். அவருக்குப் பதிலாக பாட்னா சாஹிப் தொகுதிக்கு ரத்னேஷ் குஷ்வாஹா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், கட்சிக்குள் சில அதிருப்திகள் உருவாகியுள்ளன எனவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu