மாவட்டம்
மதுரையில் 10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Oct 15, 2025 03:20 AM
78
மதுரையில் 10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மதுரையில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் - கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகன் யுவ நவநீதன்.
துப்பாக்கி சுடு வீரரான யுவநவநீதன் சிறுவயதில் இருந்தே மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து வெற்றிபெற்று ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளார்.
மதுரை ரைபிள் கிளப்பில் பயிற்சி பெற்று வந்த இவர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி, அதற்காக பயிற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று யுவ நவநீதன் ஏர்கன்னை வைத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
போலீசாரின் விசாரணையில், மாணவன் யுவன் நவநீதன் படிக்காமல் இருந்ததால் படிக்கச் சொல்லி பெற்றோர்கள் கூறியதால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu