RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

BIG STORIES

காதல் திருமணம் செய்ததால் கல்லூரி மாணவி ஆதரவின்றி வீதியில் தவிக்கும் பரிதாபம்..! கணவன் கொலையால் சோகம்

Oct 15, 2025 01:26 AM

354

காதல் திருமணம் செய்ததால் கல்லூரி மாணவி ஆதரவின்றி வீதியில் தவிக்கும் பரிதாபம்..! கணவன் கொலையால் சோகம்

காதல் திருமணம் செய்ததால் கல்லூரி மாணவி ஆதரவின்றி வீதியில் தவிக்கும் பரிதாபம்..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மகளை காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், கணவன் இறந்ததை காரணம் காட்டி மாமனார் , மாமியார் கைவிட்டுச் சென்றதால் படிப்பை கைவிட்டு காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24) பால் கறவைத் தொழில் செய்து வந்தார்.

விருவீடு அருகே கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவரது மகளான ஆர்த்தி என்ற கல்லூரி மாணவியுடன் காதல் மலர்ந்திருக்கிறது .

சாதி கடந்த காதல் என்பதால் ஆர்த்தியின் தாய் தந்தை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை மீறி ராமச்சந்திரன் ஆர்த்தியை கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு கூட்டிச்சென்று திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் வைத்து ராமச்சந்திரனை, ஆர்த்தியின் தந்தை வெட்டியுள்ளார். உயிர்காத்துக் கொள்ள ராமச்சந்திரன் திருப்பித் தாக்கி உள்ளார். தலையில் காயம் அடைந்த நிலையிலும், ராமசந்திரனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு சந்திரன் தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மருமகனை படுகொலை செய்ததாக மாமனார் சந்திரன் தலையில் கட்டுடன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொலை சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆய்வு மேற்கொண்டார். கணவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தனது தந்தை மட்டுமல்லாமல் தனது சகோதரருக்கும் தொடர்பு உள்ளதாக ஆடியோ ஆதாரத்தை வெளியிட்ட ஆர்த்தி, அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கொலையுண்ட ராமச்சந்திரனின் உடல் பிணகூறாய்வுக்கு பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட நிலையில் தனக்கு பதில் சொல்லி விட்டு உடலை எடுத்து செல்லுங்கள் என்று ஆர்த்தி, ராமசந்திரனின் பெற்றோரிடம் கேட்க அவருக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் சிலர் , “கல்லூரி படிப்பை பாதியில் விட்டுட்டு, அவன திருமணம் செஞ்சா..., இப்ப எங்க வீட்டு பெண் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு” ? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

நாங்களே ஒரே பிள்ளையை பறிகொடுத்த துக்கத்தில இருக்கோம், என்ற ராமசந்திரனின் பெற்றோர் “இதுக்கு தான் முதலிலேயே காதல் வேணாமுன்னு சொன்னோம்” என்று தலையில் அடித்துக் கொண்டனர்.

ராமச்சந்திரனின் உடலை எடுத்துச்செல்ல விடாமல் வாகனத்தின் முன்பு தரையில் அமர்ந்து தன்னிடம் கேட்காமல் எப்படி வண்டியில் ஏற்றலாம் என்று ஆர்த்தி, தரையில் அடித்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

பின்னர் அவருக்கு ஆதரவாக பேசிக் கொண்டு நின்ற இளைஞர்களே அந்த பெண்ணை போலீஸ் உதவியுடன் அப்புறப்படுத்த உதவியதால், யாரை நம்புவது என்று தெரியாமல் ஆதரவின்றி தவித்து நிற்பதாக கண்ணீர் விட்டார் ஆர்த்தி.

சாதி கடந்து காதலித்து திருமணம் செய்து கொண்டதால் கணவனை பறிகொடுத்து நிர்க்கதியாய் தவிக்கும் ஆர்த்திக்கு தேவையான உதவிகளை அரசு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies