BIG STORIES
காதலால் விழுந்த தலை.. திமுக பிரமுகர் முகத்தில் கணக்கில்லா வெட்டுகள்..! பழிக்கு பழியாக பயங்கரம்
Oct 14, 2025 01:20 AM
542
காதலால் விழுந்த தலை.. திமுக பிரமுகர் முகத்தில் கணக்கில்லா வெட்டுகள்..! பழிக்கு பழியாக பயங்கரம்
சென்னை அடையாறில் பட்டபகலில் திமுக பிரமுகரும், ரவுடியுமான கொட்டிவாக்கம் குணா மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக தலையை சிதைத்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
பட்டபகலில் தலை நகரை கலங்க வைத்த கொடூர கொலை சம்பவத்தை கண்டு பலியானவரின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் தான் இவை..!
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் குணா என்கிற குணசேகரன். 45 வயதான இவர் மீது கடந்த ஆண்டு வழக்கறிஞர் கவுதம் என்பவரின் கொலை வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேட்டு குற்றவாளியான குணா, திமுகவில் முக்கிய பிரமுகர்களுடன் நட்பில் இருந்தவர்.
தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர்களுக்காக வீடு வீடாக வாக்கு சேகரித்த களப்பணியாளர் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சென்னை அடையாறு இந்திரா நகர் பெட்ரோல் பங்க் அருகே திங்கட்கிழமை மாலை நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்த குணாவை பைக்கில் வந்து வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தலையை சிதைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
தகவல் அறிந்த அடையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குணாவின் உடலை கைப்பற்றி பிணகூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குணா கொல்லப்பட்ட தகவல் அறிந்து வந்த கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வழக்கறிஞர் ஒருவர் கடந்த ஆண்டு கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
குணாவின் மகளை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாகவும் அந்த இளைஞரை குணா மிரட்டி விரட்டியதாகவும் கூறப்படுகின்றது. இளைஞருக்கு ஆதரவாக செயல்பட்டதால் திருவான்மியூர் அவ்வை நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுதம் மீது குணாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி இரவு திருவான்மியூர் திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் அருகே நண்பர்களுடன் பேசிக் பேசிக் கொண்டிருந்த வழக்கறிஞர் கவுதமை குணாவின் ஆதரவாளர்கள் கொடூரமாக வெட்டி சாய்த்ததாக கூறப்படுகின்றது.
வழக்கறிஞர் கௌதம் கொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முதல் ஆளாக சேர்க்கப்பட்ட கொட்டிவாக்கம் குணாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் குணா வெளிவந்த நிலையில் கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தனுஷ் என்பவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில்,
வழக்கறிஞர் கவுதம் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. நீலாங்கரையைச் சேர்ந்த ரோகித் திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த குட்டி ஆகியோர் ரவுடி குணசேகரனின் நடமாட்டத்தை கண்காணித்து கொலை சம்பவத்தை அரங்கேற்றிள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தனுஷ் இடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தலைமறைவாக உள்ள மற்ற ஏழு நபர்களை சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu