உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025
முகப்பு
இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் இறந்த விவகாரம் - அமலாக்கத்துறை விசாரணை
Oct 13, 2025 03:43 PM
42
ஸ்ரீசன் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கிய அதிகாரிகள் வீடுகளில் சோதனை
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு நிர்வாகத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத்துறையினர், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திலும் அதன் உரிமையாளர் ரங்கநாதனின் கோடம்பாக்கம் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மருந்து தரக் கட்டுப்பாட்டு பொறுப்பு இயக்குனராக இருந்த கார்த்திகேயனின் வீடு, உதவி இயக்குனர் தீபா ஜோஸ் வீடு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு நிர்வாகத் துறையின் காஞ்சிபுரம் மாவட்ட ஆய்வாளரான மற்றொரு கார்த்திகேயனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்ரீசன் பார்மா நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகளாக நிறுவனத்தில் சோதனை நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்தி குறித்த விவரங்களைப் பதிவேற்றுவதற்காக உள்ள சுகம் என்ற வலைதளத்தில் ஸ்ரீசன் நிறுவனம் தனது விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu