RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

முகப்பு

இன்ஸ்டாவில் '96 காதல்' விட்டுச்சென்ற மனைவி.. கிளைமேக்ஸில் பயங்கரம்..! இளைஞர் கொலை பின்னணி

Oct 12, 2025 01:55 AM

145

இன்ஸ்டாவில் '96 காதல்' விட்டுச்சென்ற மனைவி.. கிளைமேக்ஸில் பயங்கரம்..! இளைஞர் கொலை பின்னணி

இன்ஸ்டாகிராம் 96 காதலால் பாய்ந்த கத்தி..! பிறன் மனைவியை நோக்கியவர் ப*யான பின்னணி

சூலூர் அருகே சித்த நாயக்கன்பாளையத்தில் வசிப்பவர் சந்தோஷ் (24). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் சூலூர் அருகே லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த சந்தோஷை மர்ம ஆசாமிகள் இருவர் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். சிசிடிவி ஆதாரத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 96 படம் போல முன்னாள் காதலியை இன்ஸ்டாகிராமில் சந்தித்து மீண்டும் காதலை வளர்த்து ஊர் சுற்ற ஆரம்பித்ததால், குடும்பத்தில் உண்டான விரிசலால் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சந்தோஷ், திருமணத்திற்கு முன்பு தேவி என்ற பெண்ணை மூன்று வருடங்களாக காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஜாதகம் பொருந்தாததால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் சந்தோஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் சித்தநாயக்கன்பாளையத்தில் வசித்து வந்தார். தேவியும் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்(26) என்பவரை திருமணம் செய்து கொண்டு திருப்பூர் மாவட்டம் கரடிவாவியில் தனது தாய் வீட்டு அருகே வாழ்ந்து வந்தார். இவர்களுக்கும் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சந்தோஷ் இன்ஸ்டாகிராம் மூலம் தனது முன்னாள் காதலியான தேவியுடன் அண்மையில் மீண்டும் நட்பை புதுப்பித்துள்ளார். அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோ காலில் பேசி தங்களது காதலை திருட்டுத்தனமாக வளர்த்து வந்துள்ளனர். இதனை அறிந்த ரவிச்சந்திரன் பலமுறை இருவரையும் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் தனது பழைய காதலியுடன் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் சந்தோஷ் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி சந்தோஷ் தனது காதலி தேவியை அழைத்துக் கொண்டு திடீரென மாயமானார். தனது மனைவியை காணவில்லை என ரவிச்சந்திரன் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து நான்கு நாட்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று விட்டு தேவியை கொண்டு வந்து வீட்டில் விட்டு சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு ரவிச்சந்திரனும் தேவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

தனது மனைவி தன்னிடமிருந்து பிரிய காரணமான சந்தோஷை பழிவாங்க ரவிச்சந்திரன் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சந்தோஷ் இருக்கும் இடம் தெரியவந்ததால், ஆவேசமாக புறப்பட்ட ரவிச்சந்திரன் தனது உறவினரான நவீனுடன் சேர்ந்து சந்தோஷிடம் வம்பிழுத்துள்ளார். தனது மனைவியுடன் இன்ஸ்டாகிராமில் எதற்காக பேசுகிறாய் ? என வாக்குவாதம் செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷை விரட்டி விரட்டி சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர் .

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரவிச்சந்திரனையும், நவீனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கத்தியை எடுத்து குத்தும் போது இருவருக்கும் கையில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies