இந்தியா
ஏற்றுமதி சார்ந்த பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் - பிரதமர் மோடி கோரிக்கை
Oct 11, 2025 03:19 PM
99
பிரதமர் மோடி கோரிக்கை
உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதுடன், உலக சந்தைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் வகையில் ஏற்றுமதி சார்ந்த பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வேளாண்மை மற்றும் சார்ந்த துறைகளில் 42,000 கோடி ரூபாய் மதிப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். 24,000 கோடி ரூபாய் மதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தும், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் தன் தான்ய கிரிஷி யோஜனா என்ற ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி ஊக்குவிப்புத் திட்டமும் இதில் அடங்கும். மேலும், பருப்பு வகைகளின் உற்பத்தி, சாகுபடி, கொள்முதல், பதப்படுத்துதலை மேம்படுத்த ரூபாய் 11ஆயிரத்து 400 கோடியில் திட்டம் துவங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் மானியம் மட்டுமே உரங்களுக்காக வழங்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 13 லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu