RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

முகப்பு

திருச்சியில் கொள்ளை போன 10 கிலோ தங்க நகையை சாமர்த்தியமாக மீட்டது எப்படி ? ‘தீரன்’ எஸ்.பி செல்வ நாகரத்தினம்

Oct 11, 2025 01:21 AM

643

திருச்சியில் கொள்ளை போன 10 கிலோ தங்க நகையை சாமர்த்தியமாக மீட்டது எப்படி ? ‘தீரன்’ எஸ்.பி செல்வ நாகரத்தினம்

தங்கம் விக்கிற விலையில.. 10 கிலோ தங்கம் கொள்ளை..! சினிமா பாணியில் கொள்ளை கும்பலை மடக்கிய போலீஸ்..

சென்னை எர்ணாவூரை சேர்ந்த தங்க நகை மொத்த வியாபாரி குணவந்த் , திருச்சி அருகே காரில் சென்ற போது அவரது காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக இருந்ததாக குணவந்தின் கார் ஓட்டுனர் பிரதீப்பை , திருச்சி எஸ்.பி செல்வ நாரத்தினத்தின் தனிப்படை போலீசார் தட்டித்தூக்கினர்.

பிரதீப் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையர்கள் தப்பிச்சென்ற காரை பின் தொடர்ந்து வழி நெடுக சிசிடிவி காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். சாமர்த்தியமாக துப்பு துலக்கிய ஏடிஎஸ்பி தினேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் கர்நாடகத்தில் கொள்ளையர்களின் காரை கண்டுபிடித்தனர். வட மாநிலங்களுக்கு எல்லாம் சென்று மொத்தம் 12 பேரை கைது செய்தது எப்படி என்று விவரித்தார் திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம்

கைதான கொள்ளையர்களிடமிருந்து இதுவரை 9. 689 கிலோ நகையை மீட்டுள்ளதாகவும், 6 லட்சம் ரூபாய் பணத்தையும் ஒரு துப்பாக்கி, நம்பர் மாற்றி தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக செல்வ நாகரத்தினம் தெரிவித்தார்

தமிழகத்தில் இருந்து 1300 சவரன் நகைகளுக்கு மேல் கொள்ளையடித்துச்சென்ற பவாரியா கொள்ளையர்களிடம் இருந்து கூட இதுவரை நகை ஏதும் மீட்கப்படாத நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்களிடமிருந்து , 97 சதவீதம் கொள்ளை போன நகை மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு வட மாநிலங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் ஓட்டுனர் மற்றும் வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் போது குற்ற பின்னணியை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies