RECENT NEWS

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

BIG STORIES

காய்கறிகளை சாலையில் கொட்டிய வியாபாரிகள்.. FREE ஆ.. அள்ளிச்சென்ற மக்கள்..! புது கட்டிடம்..! புது பிரச்சனை..!

Oct 10, 2025 01:08 AM

341

காய்கறிகளை சாலையில் கொட்டிய வியாபாரிகள்.. FREE ஆ.. அள்ளிச்சென்ற மக்கள்..! புது கட்டிடம்..! புது பிரச்சனை..!

காய்கறிகளை சாலையில் கொட்டிய வியாபாரிகள்.. FREE ஆ.. அள்ளிச்சென்ற மக்கள்..! புது கட்டிடம்..! புது பிரச்சனை..!

தென்காசி நகராட்சி தினசரி காய்கறி சந்தையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், காய்கறிகளை சாலையில் கொட்டி ஆவேசமாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த மக்கள் அதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் காய்கறிகளை இலவசமாக அள்ளிச்சென்றனர்

காய்கறியை விளைவித்த காசு கூட கைக்கு வரமாட்டேங்குது.. என்றும் பூச்சி மருந்து வாங்க கூட காசு இல்லை... அப்படி இருக்கும் போது எங்களிடம் எப்படி அதிக கட்டணம் கேட்கலாம் ? என்று தென்காசி தினசரி காய்கறி சந்தை வியாபரிகள் ஆவேசமாக காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய காட்சிகள் தான் இவை..!

தென்காசி நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தைக்கு புதிய கட்டிடம் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

தற்காலிகமாக சிறுவர் பூங்காவில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி சந்தைக்கு புதிதாக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் 79 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் அனைத்தும் பெரிய தொகை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட இருப்பதாக தென்காசி நகராட்சி அதிகாரிகளால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால் அவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுக்க இயலாது என்று அதிர்ச்சி அடைந்த தினசரி சந்தை வியாபாரிகள் ஏலம் விடும் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி கடந்த 7ம் தேதி முதல் தினசரி சந்தை கடைகள் அனைத்தையும் அடைத்து காய்கறிகளை சாலையில் கொட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3வது நாளாக கடைகளை அடைத்து காய்கறிகளை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சாப்பிடும் பொருளை வீணாக்காதீர்கள் அள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்

தாங்கள் காய்கறிகளை விளைவிக்க விவசாயிகள் படும் கஷ்டங்களை ஆதங்கமாக ஒரு வியாபாரி கொட்டித்தீர்த்தார்

போலீசாருடன் , வியாபாரிகள் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போதே குறுக்கே புகுந்த மக்கள், சாக்கு பைகளிலும் அட்டை பெட்டிகளிலும் சாலையில் கொட்டப்பட்ட காய்கறிகளை அள்ளிச்செல்ல தொடங்கினர்

இதையடுத்து “அனைத்து காய் கறிகளும் ப்ரீ.. அள்ளிச்செல்லுங்கள்” என்று வியாபரிகளே கூச்சலிட்டனர்

இதனை தொடர்ந்து தினசரி சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் திடீரென தென்காசி நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்ததுடன் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவி தலையை வெட்டிய  'சைக்கோ' கணவன்..!  மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies