RECENT NEWS

உருட்டுக்கட்டையுடன் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்

உருட்டுக்கட்டையுடன் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்

Nov 19, 2025

உருட்டுக்கட்டையுடன் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்

உருட்டுக்கட்டையுடன் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்

Nov 19, 2025

BIG STORIES

ஆதாரம் இருப்பதாக கூறி அம்பலப்பட்ட விசிகவினர்.. திருமான்னா FIR கிடையாதா ?.. 500 மிரட்டல் போன் கால்கள்..!

Oct 10, 2025 01:03 AM

892

ஆதாரம் இருப்பதாக கூறி அம்பலப்பட்ட விசிகவினர்.. திருமான்னா FIR கிடையாதா ?.. 500 மிரட்டல் போன் கால்கள்..!

சென்னை உயர்நீதிமன்றம் முன்பு திருமாவளவனின் கார், வழக்கறிஞரின் ஸ்கூட்டரை இடிக்கவில்லை என்று கூறி வீடியோ ஒன்றை வி.சி.க.வினர் வெளியிட்ட நிலையில், அதில் ஸ்கூட்டரை, கார் இடித்த காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது என்றும் 500க்கும் மேற்பட்டோர் செல்போனில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞரின் சகோதரர் குற்றஞ்சாட்டி உள்ளார்

சென்னை உயர்நீதிமன்ற சாலையில் வேகத்தடையில் மெதுவாக சென்ற போது வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் ஸ்கூட்டர் மீது விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார் மோதியதாகவும், மோதியது ஏன் ? என்று கேள்வி எழுப்பியதால் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை விசிகவினர் சுற்றி வளைத்து தாக்கி அவரது ஸ்கூட்டரையும் சேதப்படுத்தியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ் காந்தி அளித்த புகார் மனுவில், திருமாவளவன் தூண்டுதலில் பேரில் விசிகவினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரில் எஸ்பிளனேடு போலீசார் இதுவரை முதல் தகவல் அறிக்கை ஏதும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.

வழக்கறிஞர் ராஜீவ்காந்தி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், திருமா மீது புகார் அளித்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரையும் , செய்தி வெளியிட்ட மீடியா நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு விசிகவினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்

இதற்கிடையே வழக்கறிஞர் ராஜீவ் காந்தி திட்டமிட்டே திருமாவளவனின் வாகனத்துக்கு குறுக்கே சென்று தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி விசிகவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர் , அந்த வீடியோவிலேயே திருமாவளவன் சென்ற கார், அவரது வாகனத்தை இடித்ததும், ராஜீவ் காந்தி திரும்பி கார் ஓட்டுனரை நோக்கி கேள்வி கேட்பதும் மிக தெளிவாக பதிவாகி உள்ளதாக ராஜீவ் காந்தியின் சகோதரர் ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி உள்ளார்

இந்த நிலையில் திருமாவளவனை தாக்க வந்ததாக கட்சியினர் கதை அளந்து விடுவதாகவும், புகாரை வாபஸ் பெறும்படி 500க்கும் மேற்பட்டோர் போன் செய்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தார்

மதுரை மாநாட்டில் அத்துமீறிய விஜய் ரசிகரை பவுன்சர் தூக்கி வீசியதற்கே , பெரம்பலூரில் புகாரை பெற்று போலீசார் தவெக தலைவர் விஜய் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

அதற்கு ஜீரோ எப்.ஐ.ஆர் என்று காரணம் ஒன்றையும் போலீசார் தெரிவித்தனர். விபத்து மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தகுந்த வீடியோ ஆதாரம் இருந்தும் வழக்கு பதிவு செய்ய தயக்குவது ஏன் ? என்பதே நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது.

அதே நேரத்தில் திருமாவளவனின் காருக்கு முன்னால் சென்றிருக்க வேண்டிய , காவல்துறையினரின் பாதுக்காப்பு வாகனம் ஏன் அவரது காருக்கு பின்னால் சென்றது ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவி தலையை வெட்டிய  'சைக்கோ' கணவன்..!  மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies