RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

முகப்பு

20 குழந்தைகள் பலி..! கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் 350 குறைபாடுகள் என்னென்ன ? அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

Oct 09, 2025 02:14 PM

68

20 குழந்தைகள் பலி..! கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் 350 குறைபாடுகள் என்னென்ன ? அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

20 குழந்தைகள் பலி..! கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் 350 குறைபாடுகள் என்னென்ன ?

20 குழந்தைகளை பலிகொண்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தின் உற்பத்தி செயல்பாட்டில் 350-க்கும் மேற்பட்ட குறைபாடுகள் இருந்தது தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தை குடித்த குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டது.

அதனால், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்தாக 20 குழந்தைகள் பலியானதால், அந்த மருந்து எங்கே தயாரிக்கப்பட்டது? அதிலுள்ள வேதிப் பொருட்கள் குறித்து விசாரணை துவங்கியது.

அதில், கோல்ட்ரிஃப் மருந்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள ஸ்ரெசன் ஃபார்மா என்ற மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

ஆலையில் ஆய்வு நடத்திய தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதுகுறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அதிர்ச்சியளிக்கும் வகையில், மருந்து உற்பத்தி செயல்பாட்டில் 350-க்கும் மேற்பட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

முக்கியமாக டைஎதிலீன் கிளைக்கால் என்ற தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் இந்த இருமல் மருந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்தில் சுமார் 48 சதவீதத்திற்கு மேல் தடை செய்யப்பட்ட டைஎதிலீன் கிளைக்கால் இருந்துள்ளது.

குறிப்பாக இது இருமல் மருந்தே கிடையாது இது விஷம் எனவும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டைஎதிலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் பெயிண்ட் தயாரிக்கவும், பிரேக் ஆயில் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஸ்ரெசன் ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய பிரதேச போலீஸார் அங்கிருந்து சென்னைக்கு வந்து கோடம்பாக்கத்தில் வசித்து வந்த ஸ்ரெசன் ஃபார்மா உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இருமல் மருந்தில் நச்சுப்பொருள் கலந்ததால், தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஆலை உரிமையாளருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies