முகப்பு
கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்ட 21 குழந்தைகள் இறந்த சம்பவம்.. இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் சென்னையில் கைது
Oct 09, 2025 04:50 AM
128
இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 21 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பாக, மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நச்சுத்தன்மை கொண்ட கோல்ட்ரிப் இருமல் சிரப்பை உட்கொண்டதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு குழந்தைகள் இறந்ததாகத் தகவல் வெளியான நிலையில், மேலும் பல குழந்தைகள் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்குக் காரணமான காஞ்சிபுரம் ‘ஸ்ரீசன் பார்மா' நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னை போலீசார் உதவியுடன் கோடம்பாக்கத்தில் மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். அவரை சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஆலைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu