BIG STORIES
காதலா..? கடத்தலா..? சாலையில் சடலமான 11 ஆம் வகுப்பு மாணவி..! போக்சோவில் சிக்கிய இளைஞர்
Oct 09, 2025 01:07 AM
631
காதலா..? கடத்தலா..? சாலையில் சடலமான 11 ஆம் வகுப்பு மாணவி..! போக்சோவில் சிக்கிய இளைஞர்
11 ஆம் வகுப்பு மாணவியை அழைத்துக் கொண்டு பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர் சாலையில் பைக்குடன் சறுக்கிவிழுந்த சம்பவத்தில், மாணவி பலியான நிலையில் , மாணவியை கடத்திச் சென்றதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்
காதலிப்பதாக சொன்ன இளைஞருடன் ஒன்றாக பைக்கில் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி, பைக்குடன் சாலையில் சறுக்கி வீசப்பட்ட பதை பதைக்க வைக்கும் காட்சிகள் தான் இவை..!
தென்காசி மாவட்டம், வல்லம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி உயிரிழந்தார். அந்த மாணவியின் ஆடைகள் கிழிந்த நிலையில் காணப்பட்டதால் ஒருவர் தனது தோளில் கிடந்த துண்டை போர்த்தினார்
தன்னுடன் பைக்கில் வந்த மாணவியை காதலி என்று தெரிவித்த பைக் ஓட்டி வந்த இளைஞரோ, போதையில் இருப்பது போல் தன்னிலை மறைந்து சாலையில் நின்று கொண்டிருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவர் வல்லம் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ரமேஷ் என்பது தெரியவந்தது.
மாணவியின் தந்தை , செங்கோட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என்றும், இந்த விபத்து திட்டமிட்டது எனவும், தனது மகளை ரமேஷ் என்ற 24 வயது நபர் பைக்கில் கட்டாயப்படுத்தி கடத்தி செல்லும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமான ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
போக்சோ வழக்கு பதிவு செய்ய முதலில் தயங்கிய போலீசார், மது போதையில் வாகன ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஏ.டி.எஸ்.பி. போக்சோ வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவர் மீது கூடுதலாக போக்சோ சட்டப்பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மாணவியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu