BIG STORIES
வண்டிய இடி..! விரட்டி அடி..! சாலையை மறி..! விசிக தலைவருக்கு அச்சுறுத்தலா?
Oct 08, 2025 01:12 AM
1094
சென்னை உயர் நீதிமன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் கார் , இடித்து விட்டதாக கூறி நியாயம் கேட்ட வழக்கறிஞரை , விசிகவினர் பார்கவுன்சில் வரை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் வந்த கார் , தனது ஸ்கூட்டரில் இடித்து விட்டதாக கூறி ஓட்டுனரை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியவரை விசிகவினர் ஒன்று கூடி தாக்கும் காட்சிகள் தான் இவை..!
சென்னை ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி. அதிமுகவை சேர்ந்த இவர் தனது நண்பருக்கு சொந்தமான ஸ்கூட்டரில் சென்னை உயர் நீதிமன்றம் பார்கவுன்சில் அருகே சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் விசிக கொடி கட்டி வந்த கார் ஒன்று ஸ்கூட்டரின் பின் பக்கம் லேசாக உரசியதாக கூறப்படுகின்றது.
உடனடியாக வாகனத்தை நிறுத்திய வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, காரின் ஓட்டுனரை பார்த்து முறைத்துக் கொண்டே எப்படி இடிக்கலாம் ?என்று குரலை உயர்த்தி உள்ளார். காரின் முன் இருக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அமர்ந்திருந்ததை பார்த்ததும் அமைதியாக திரும்பினார்
அடுத்த சில வினாடிகளுக்கெல்லாம் விசிகவினர் பின்னால் வந்த வண்டியில் இருந்து இறங்கி வந்து வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை சூழ்ந்து கொண்டு தள்ள ஆரம்பித்தனர்.
திரும்பி பேச முயன்ற வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை நெட்டி தள்ளியதோடு, அவரது ஸ்கூட்டரை பறித்து சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது
அத்தோடு விடாமல் தலைவர் வண்டியை எப்படி மறிப்பாய் ? எனக்கேட்டு சரமாரியாக தாக்க தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
அவர்களது தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வழக்கறிஞர் ராஜீவ்காந்தி அருகில் இருந்த தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கட்டிடத்துக்குள் ஓட அவரை விரட்டிக் கொண்டே அந்த கும்பல் உள்ளே ஓடியது. போலீசார் அவரை மீட்டு கொண்டு சென்றனர்.
விசிகவினர் தாக்கியதை அங்கிருந்த பலரும் தங்கள் செல்போனில் படம் பிடித்ததால் உஷாரான விசிகவினர் , திருமாவளவனை தாக்க முயன்ற மர்ம நபரை கைது செய்ய கோரி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
வண்டியை இடித்தது ஏன் என்று கேள்வி கேட்டவரை அடித்து, விரட்டி விட்டு... கைது செய்ய வேண்டும் என்று விசிகவினர் பிடிவாதமாக போராட்டத்திலும் ஈடுபட்டதால் என்ன செய்வதென்றே தெரியாமல் போலீசார் குழம்பி போயினர்
சிறிது நேரம் கழித்து திருமாவளவன் கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார் விசிக வழக்கறிஞர் ரஜினிகாந்த்,
பின்னர் காவல் நிலையம் சென்று தாக்கப்பட்ட நபர் மீதே நடவடிக்கை கோரி புகார் மனு ஒன்றை அளிக்கப்பட்டது.
சமத்துவ வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பார்வேந்தன் என்பவர் புகார் கொடுத்தார். அதில் “அடையாளம் தெரியாத, பெயர் தெரியாத நபர் , தலைவரின் வாகனத்தை மோதி நிறுத்தி, தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்று.. தாக்க முற்பட்டதாகவும், மேற்படி நபரின் நோக்கம் எங்கள் தலைவரை தாக்க வேண்டும் என்பதே, அதனால் மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ்காந்தி “தான் பார்கவுன்சிலுக்கு ஐடி கார்டு வாங்க வந்ததாகவும், “ தான் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது பின்னால் வந்த கார் இடித்ததை தட்டிக்கேட்டபோது, அந்த காருக்குள் இருந்த திருமாவளவன் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
ஸ்கூட்டரை சேதப்படுத்தி, தன்னை பார்கவுன்சில் வரை விரட்டி தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, முகம் தெரிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் அடிபட்டவரிடம் காவல் நிலையத்தில் புகாரை பெற மறுத்து விட்டனர். இதற்கிடையே அவர் மயக்கம் அடைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu