BIG STORIES
அறை எண் 203ல் அரசு டாக்டர்.. தலைவலிக்கு 100 மாத்திரையா.? மருத்துவர் பதிலால் மிரண்ட பெண்..!
Oct 07, 2025 12:42 PM
493
மருத்துவர் பதிலால் மிரண்ட பெண்..!
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு தலைவலி சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு , மருத்துவரின் கவனக்குறைவால் தவறுதலாக 100 சுகர் மாத்திரைகளை வழங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தலைவலி சிகிச்சைக்கு சென்ற தனக்கு 100 சுகர் மாத்திரை தந்ததாக புகார் தெரிவித்த போச்சம் பள்ளி விஜயகலா இவர் தான்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டம், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் என நாள் ஒன்றுக்கு 2500 முதல் 3000 ஆயிரம் பேர் வரை புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு, பொடார் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான விஜயகலா என்பவர் தலைவலிக்கு சிகிச்சை எடுக்க சென்றுள்ளார்.
அங்கு வழக்கம் போல் கம்ப்யூட்டரில் புறநோயாளிக்கான சீட்டு பதிவு செய்யப்பட்டு 102ம் நம்பர் அறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற விஜயகலா, அங்கிருந்த மருத்துவரிடம் தலைவலி எனக்கூறியுள்ளார். அவர் சீட்டை வாங்கி பார்த்துவிட்டு அதில் ENT என எழுதி 203ம் நம்பர் அறைக்கு போய் பாருங்கள் என விஜயகலாவை அனுப்பியுள்ளார்.
அங்கு சென்று பார்த்தபோது மருத்துவர் ஒருவர் மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்துள்ளார். பின்னர் அவரிடம் புறநோயாளிகள் சீட்டை காட்டியதற்கு. வாம்மா இங்க உட்காரும்மா.. எனக் கூறியவர், விஜயகலாவை வைத்தே அங்கிருந்த மாணவ, மாணவிகளுக்கு தொண்டை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்துள்ளார். ஒன்றும் புரியாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தலைவலியுடன் மாடல் போல அங்கு இருந்த விஜயகலா, “சார் ரொம்ப தலைவலிக்குது மருந்து கொடுங்க..” எனக்கேட்டதும், ஒரு வழியாக, அவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டை வாங்கி கொண்டு, ஊசி போடும் இடத்திற்கு சென்று ஊசி போட்டுக்கொண்டார்
40 நிமிடங்களுக்கும் மேலாக வரிசையில் நின்று மருந்து மாத்திரைகளை வாங்கியுள்ளார். கவரை பிரித்து பார்த்த போது உள்ளே 100க்கும் மேற்பட்ட மாத்திரைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் மருந்து வழங்கிய நபரிடமே சென்று விஜயகலா கேட்டபோது, அவரோ, ஏம்மா ஒரு நாளைக்கு நீ 6 மாத்திரை சாப்பிடணும், சுகர், BP எல்லாம் வச்சிகிட்டு, எடுத்துட்டு வந்துட்ட போமா.. என விரட்டியதாக தெரிவித்தார் விஜயகலா.
பின்னர் மீண்டும் 102 அறையில் இருந்தவரிடம் போய் கேட்டுள்ளார். அவரோ 203ம் நம்பர் அறைக்கு போய் கேளும்மா என திருப்பி அனுப்பியுள்ளார். வேறு வழியின்றி விஜயகலாவும் போய் கேட்டுள்ளார். அதற்கு அங்கு இருந்த மருத்துவரோ சாரிமா தெரியாம கொடுத்துட்டோம், எனக்கூறி அனுப்பியதாக தெரிவித்த விஜயகலா, தெரிந்த எனக்கே இப்படி, தெரியாதவர்கள் என்ன பண்ணுவாங்க, நாங்க உங்களை தானே நம்பி வருகிறோம் எனகேட்டதற்கு அலட்சியமாக டீன் கிட்ட போய் பேசுங்க என கூறியதாக புகார் தெரிவித்தார்.
அங்கு முறையாக யாரும் பதில் சொல்லாததால், வேறு வழியின்றி வெளியில் சென்று தனியார் கிளினிக் மெடிக்கல்ஸில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு தலைவலியை குணப்படுத்தியதாக விஜயகலா தெரிவித்தார்.
அதே நேரத்தில் தலைவலி என சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு சுகர் மாத்திரை கொடுத்து தினமும் 6 மாத்திரைகள் சாப்பிட சொன்ன சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் சத்தியபாமா தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu