RECENT NEWS

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

BIG STORIES

போதையில் ஓட்டலில் ஆட்டம்.. இசையமைப்பாளரின் மகள் 18 பேர் கும்பலில் சிக்கியது எப்படி? போலீஸ் தட்டித்தூக்கியது ஏன்?

Oct 07, 2025 10:37 AM

2154

போதையில் ஓட்டலில் ஆட்டம்.. இசையமைப்பாளரின் மகள் 18 பேர் கும்பலில் சிக்கியது எப்படி? போலீஸ் தட்டித்தூக்கியது ஏன்?

போதையில் ஓட்டலில் ஆட்டம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அபுபேலஸ் ஓட்டலில் உள்ள Shadow பப்பில் போதை வஸ்துக்களை பயன் படுத்தி ஆட்டம் போட்டதாக இசையமைப்பாளரின் மகள் உள்ளிட்ட 18 பேரை மத்திய போதை தடுப்பு நுண்ணறிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் அபு பேலஸில் உள்ள Shadow பப்பில் கஞ்சா மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெறுவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு சோதனையிட்டபோது பப்பில் பார்ட்டி முடிந்தவுடன் அதே ஹோட்டலில் மூன்று அறைகளில் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர்.

போதை விருந்தில் பங்கேற்ற 3 பெண்கள் உள்பட 17 பேர் மற்றும் ஹோட்டல் மேலாளர் சுகுமார் என 18 பேரையும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

18 மொபைல் போன்கள், மூன்று கார்கள், இரண்டு டூவீலர்கள், சிறிதளவு கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவருமே சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களில் week end-ல் நடக்கும் போதை விருந்துகளில் ஒன்றாக பங்கேற்பவர்கள் என தெரிய வந்தது.

வாட்ஸ் அப் குழு அமைத்து ஒருங்கிணைத்து மாதம் இரண்டு முறை போதை விருந்தில் பங்கேற்பது வழக்கம் என்றும் கைதான 18 பேரில் ஆனந்தபுரத்து வீடு படத்தின் இசையமைப்பாளர் மகளும் ஒருவர் என போலீசார் தெரிவித்தனர். சக்திவேல், இர்பான் ஆகிய இருவரும் ஏற்கனவே போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 18 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் நள்ளிரவு போலீசார் ஆஜர்படுத்தினர். சென்னை பெருநகர இரண்டாவது நீதித்துறை நடுவர் இந்து லதா, 18 பேரையும் ஜாமினில் விடுவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவி தலையை வெட்டிய  'சைக்கோ' கணவன்..!  மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies