RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

BIG STORIES

நண்பனின் தந்தை கடத்தல்.. 318 கிராம் தங்கக்கட்டி பறிப்பு.. அஜித் கைது .. விஜய் ஓட்டம்..! நல்லா வச்சாங்க பேரு..!?

Oct 07, 2025 01:45 AM

206

நண்பனின் தந்தை கடத்தல்.. 318 கிராம் தங்கக்கட்டி பறிப்பு.. அஜித் கைது .. விஜய் ஓட்டம்..! நல்லா வச்சாங்க பேரு..!?

ஸ்கெட்ச் போட்டு நண்பனின் தந்தையை கடத்தி தங்க கட்டியை பறித்த கேடி கும்பலை மடக்கிய போலீசார் பெண் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சங்கரன்தெருவை சேர்ந்தவர் பூவராகவன் (62). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 29ம் தேதி இவர் தனது வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார். அவர் புதுவை-திண்டிவனம் சாலையில் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்ற 2 பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்து, அவரை வழிமறித்தனர்.

ஆனால் அவர் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். மீண்டும் அவர்கள் 2 பேரும் அவரை மோதுவது போல் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இருப்பினும் அதை கண்டுகொள்ளாத அவர் திண்டிவனம் புறவழிச்சாலை மொளசூர் அருகே சென்ற போது, காரிலும், மோட்டார் சைக்கிளிலும் வந்த கும்பல் அவரை வழிமறித்து காரில் கடத்திச்சென்றது.

பின்னர் பூவராகவன் மகன் அரிஷ் கேசவை தொடர்பு கொண்ட கும்பல், "உன் தந்தையை கடத்தி விட்டோம். ரூ.1 கோடி தந்தால் தான் அவரை விடுவிப்போம்" என்று மிரட்டி உள்ளனர். ஆனால் அரிஷ் கேசவ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்போது கேசவ் உடன் இருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த நண்பன் அஜித், தந்தையை அவர்கள் கொன்றுவிட்டால் நமக்கு தந்தை கிடைக்க மாட்டார் நாம் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து விடுவோம் என கூறியுள்ளார்.

இதையடுத்து அரிஷ்கேசவ் வங்கி லாக்கரில் இருந்த 310 கிராம் தங்க கட்டியை (38¾ பவுன்) எடுத்து, அவர்களை தொடர்பு கொண்டு எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரிக்கரை பகுதிக்கு வருமாறு கூறியுள்ளனர். அதன்படி அங்கு சென்ற அரிஷ் கேசவ் மற்றும் அஜீத் அவர்களிடம் 310 கிராம் தங்க கட்டியை கொடுத்து விட்டு, தந்தை பூவராகவனை மீட்டு வந்துள்ளார்.

பூவராகவனை விடுவிக்கும்போது கடத்திச் சென்றவர்கள் போலீஸிடம் சென்றால் சென்னையில் உள்ள உன் மகளை கடத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பூவராகவன் கடந்த ஒரு வார காலமாக இத்தகவலை வெளியில் செல்லாமலேயே இருந்துள்ளார்.

வீட்டில் இருந்த தங்க கட்டி கடத்தல் கும்பல் கையில் இருப்பது குறித்து பூவராகவன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை புகார் செய்தார்.

விசாரணையில், பூவராகவன் மகன் கேசவ் உடன் இருந்த நண்பன் அஜித் இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. சிசிடிவி ஆதாரங்களை கொண்டு அஜித் (24), சதீஷ்குமார் (40), வினோத்ராஜ் (34), ரேணுகா (40), விஜய் ஆகிய 5 பேரும் சேர்ந்து அவரை கடத்திச்சென்றது தெரிந்தது.

நண்பர் என்பதால் அஜித், அரிஷ்கேசவ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அவர்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்க, அஜித் திட்டமிட்டுள்ளார். அவர்களுக்கு ஆதரவாக யாரும் வர மாட்டார்கள் என்பதையும் அஜித் அறிந்து வைத்திருந்தார்.

இதையடுத்து பூவராகவனை கடத்தி, பணத்தை பறிக்க அஜித் தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டுக் கொடுத்து பூவராகவனை கடத்தி தங்ககட்டியை பறித்ததாக கூறப்படுகின்றது.

இது எதுவும் தெரியாதது போல் அஜித், அரிஷ் கேசவுடன் இருந்து கொண்டு, நகையை வங்கி லாக்கரில் இருந்து எடுப்பது, அவருடன் சேர்ந்து கடத்தல் காரர்களிடம் கொடுப்பது என அனைத்து நடவடிக்கைகளிலும், அரிஷ் கேசவ் உடன் இருந்துள்ளார்.

அவ்வப்போது இங்கு நடக்கும் விவரங்களை கடத்தல்காரர்களான தனது நண்பர்களுக்கு தெரியப்படுத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து பூவராகவனை கடத்தி தங்க கட்டி பறித்த வழக்கில் அஜித், சதீஷ்குமார், வினோத்ராஜ், ரேணுகா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள கூட்டாளி விஜய்யை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நண்பர்கள் என்றாலும் உறவினர்கள் என்றாலும் வீட்டில் நடக்கின்ற வரவு செலவுகளையும் , பண புழக்கத்தையும் அவர்கள் முன் செய்வது வில்லங்கத்தை வீட்டிற்குள் வரவைக்கும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies