தமிழ்நாடு
விஜய் பெயரில் கேரவன் அடுத்தடுத்து சிக்கல்..! காவல்துறையின் அதிரடி முடிவு
Oct 06, 2025 04:46 PM
322
விஜய் பெயரில் கேரவன் அடுத்தடுத்து சிக்கல்..! காவல்துறையின் அதிரடி முடிவு
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றம், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
இதனால் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சிறப்பு புலனாய்வுக் குழு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நாமக்கல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கரூர் செல்லும் வழியில் விஜயின் பிரச்சார வாகனத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
அது தொடர்பாக ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், வழக்கு பதிவு செய்து விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
விபத்து நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தரப்பில் புகார் எதுவும் கொடுக்கவில்லை எனவும், இந்த சம்பவம் எங்கு நடந்தது எனவும் தெரியாமல் போலீசார் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தேடி வந்தனர்.
பின்னர் தான், இந்த விபத்து சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி அருகே நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அல்லது மற்றவருக்கு காயத்தை ஏற்படுத்தும் வகையில் அதி வேகமாக வாகனத்தை ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் விஜய்யின் பேருந்து ஓட்டுனர் மற்றும் பல்சர் மற்றும் யமஹா இருசக்கர வாகன ஓட்டிகள் இருவர் என மொத்தம் 3 பேர் மீதும் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனடியாக விஜயின் பிரச்சார வாகனம் பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அடுத்த கட்டமாக விபத்தை ஏற்படுத்தியதாக விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரச்சார வாகனம் விஜயின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu