முகப்பு
உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் நடத்த முயற்சி..!
Oct 06, 2025 12:29 PM
105
உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் நடத்த முயற்சி..!
நாட்டின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து வழக்கறிஞர் ஒருவர் தனது ஷூவை வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜூராஹோ கோவிலில் கடவுள் விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்ற மனு தொடர்பாக தலைமை நீதிபதி கவாய் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் தாக்குதல் நடத்த முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஷ்ணு சிலை தொடர்பான மனு விளம்பர நோக்கம் கொண்டது என்றும் மீண்டும் விஷ்ணு சிலை வேண்டும் என்றால் கடவுளிடம் சென்று கேளுங்கள் என்றும் நீதிபதி கவாய் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று வழக்கு ஒன்றின் விசாரணையின்போது திடீரென கூச்சலிட்டபடி வந்த மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது ஷூவை கழற்றி வீச முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். சனாதனத்தை அவமதிப்பவர்களை தன்னால் ஏற்க முடியாது எனக்கூறி அந்த வழக்கறிஞர் முழக்கமிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சனாதனத்தை அவமதிக்கும் வகையில் தலைமை நீதிபதி கவாய், பேசியதால் தாக்க முயன்றதாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu