BIG STORIES
இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை.. காமுகன்களுக்குக் காவல்துறை வைத்த 'செக்'.. கைவிலங்கோடு நடந்த 'ஊர்வலம்'
Oct 06, 2025 01:45 AM
459
இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை.. காமுகன்களுக்குக் காவல்துறை வைத்த 'செக்'.. கைவிலங்கோடு நடந்த 'ஊர்வலம்'
ஆந்திர மாநிலம் சித்தூரில் இளம் பெண் ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களைக் கைது செய்த போலீசார், பொதுமக்கள் பார்க்கும் வண்ணம், மூவருக்கும் கைவிலங்கிட்டு நீதிமன்றத்துக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் கடந்த 25ஆம் தேதி ஆள் நடமாட்டம் இல்லாத பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் தனிமையில் இருந்துள்ளனர்.
அவர்களை செல்போனில் வீடியோ எடுத்த 3 பேர், அந்த வீடியோவைக் காண்பித்து, காதல் ஜோடியிடம் பணம் கேட்டுள்ளனர்.
அவர்கள் பணம் தர மறுத்ததால், காதலனை கொடூரமாகத் தாக்கி, பணத்தைப் பறித்துக் கொண்டு அடித்து விரட்டியுள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான காதலன் தாமதமாகச் சென்று அளித்த புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்ணை ரகசியமாக அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் மூலம் அத்துமீறலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர்.
மகேஷ், கிஷோர், ஹெமன் பிரசாத் ஆகிய அந்த மூவரையும் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம், கையில் விலங்கிட்டு, ஊர்வலமாக சாலை மார்க்கமாக நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின், மூவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது தவறு என சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் போலீசாரின் இந்த செயல் சரியானதுதான் என்று கூறி பொதுமக்களும் இணையவாசிகளும் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu