RECENT NEWS

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

முகப்பு

கரூர் கூட்டநெரிசல் குறித்து தமிழக அரசு வீடியோ வெளியிட்டு விளக்கம்

Sep 30, 2025 12:30 PM

57

கரூர் கூட்டநெரிசல் குறித்து தமிழக அரசு வீடியோ வெளியிட்டு விளக்கம்

கரூரில் நடைபெற்ற சம்பவங்களை நேர வாரியாக குறிப்பிட்டு தமிழக அரசு வீடியோ வெளியீடு

அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

கரூர் கூட்டநெரிசல் - தமிழக அரசு விளக்கம்

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம்

உள்துறை செயலாளர் தீரஜ்குமார், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பு

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக வீடியோ ஒளிபரப்பு

விஜயின் பரப்புரையின்போது விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம்

கரூரில் நடைபெற்ற சம்பவங்களை நேர வாரியாக குறிப்பிட்டு தமிழக அரசு வீடியோ வெளியீடு

பிரச்சாரத்தின்போது காவல்துறைக்கு விஜய் நன்றி கூறிய காட்சியும் அரசு வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்றது

முதலில் 7 இடங்களை குறிப்பிட்டு தவெகவினர் அனுமதி கோரி மனு அளித்திருந்தனர் - அமுதா ஐஏஎஸ்

25ஆம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில் தவெக பிரச்சாரம் செய்ய அனுமதிகோரி மனு அளித்தனர் - அமுதா ஐஏஎஸ்

தவெகவினர் முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் நீர்வழித்தடம் இருந்தது - அமுதா ஐஏஎஸ்

கேட்ட இடத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்ற தவெகவினரின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு விளக்கம்

விஜயின் பிரச்சாரத்திற்கு 10,000 பேர் வரையிலும் வருவார்கள் என அனுமதி கடிதத்தில் தவெகவினர் குறிப்பிட்டிருந்தனர் - தமிழக அரசு

விஜயின் கடந்த பிரச்சாரங்களின் அடிப்படையில் 20,000 பேர் கரூரில் வருவார்கள் என கணிக்கப்பட்டது - தமிழக அரசு

விஜயின் பிரச்சாரத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என அரசால் கணிக்கமுடியவில்லையா? என்ற விமர்சனத்திற்கு பதில்

தவெகவினர் கூறியதை விட அதிக தொண்டர்கள் வருவார்கள் என்பதால் தான் வேலுச்சாமிபுரம் தேர்வு செய்யப்பட்டது - தமிழக அரசு

50 பேருக்கு ஒரு காவலர் என்பதே வழக்கமான நடைமுறை; கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் பணியில் இருந்தனர்

கரூரில் 3 மணிக்கே 20,000-க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர் - தமிழக அரசு

கரூரில் விஜயின் பிரச்சாரத்தின்போது மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை - தமிழக அரசு

கூட்டம் நடக்கும்போது மின்விநியோகத்தை நிறுத்துமாறு தவெகவினர் கேட்டு மனு அளித்திருந்ததை குறிப்பிட்டு விளக்கம்

ஜென்செட் பகுதிக்குள் தொண்டர்கள் நுழைந்ததால் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஃபோக்கஸ் விளக்கு அணைந்தது - தமிழக அரசு

த.வெ.க.வினர் மனு அளித்தபோதும் மின் விநியோகத்தை நிறுத்தவில்லை - தமிழக அரசு

விஜயின் வாகனம், ஆம்புலன்ஸ் செல்லவே போலீசார் கூட்டத்தை விலக்கி விட்டனர் - தமிழக அரசு

கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தவில்லை என்றும் தமிழக அரசு விளக்கம்

கரூரில் விஜய் பரப்புரை செய்த இடத்தைச் சுற்றி 3 இடங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது - தமிழக அரசு

விஜய் வாகனம் வரும்போது ஒரே நேரத்தில் 4 புறங்களில் இருந்தும் கூட்டம் முண்டியடித்ததால் நெருக்கடி ஏற்பட்டது - தமிழக அரசு

விஜய் பரப்புரையின்போது அடிக்கடி ஆம்புலன்ஸ்கள் வந்தது குறித்து தமிழக அரசு விளக்கம்

விஜய் பிரச்சாரம் நடைபெற்ற இடத்திற்கு அருகே 108 ஆம்புலன்ஸ்கள் 6 இருந்தன - தமிழக அரசு

இரவு 7 மணிக்கு மேல் அழைப்பு வந்ததால் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டன - தமிழக அரசு

7 ஆம்புலன்ஸ்கள் நிகழ்ச்சிக்காக த.வெ.க. முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தது - தமிழக அரசு

சம்பவம் நடைபெற்ற தகவலறிந்து 33 ஆம்புலன்ஸ்கள் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து அனுப்பப்பட்டன

பிரச்சாரத்தில் இருந்த காவல்துறையினர் தங்களது வயர்லெஸ் மூலம் தகவல் அளித்ததால் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன

நீர்ச்சத்து குறைபாடால் மக்கள் மயங்கிய காட்சி, அவர்களுக்கு காவலர்கள் உதவும் காட்சி வெளியீடு

கூட்டம் அதிகமாக அதிகமாக சூழலுக்கு ஏற்ப காவலர்கள் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டனர் - தமிழக அரசு

கூடுதல் போலீசார் அண்டை மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டனர் - ஏடிஜிபி

த.வெ.க.வினர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதி கேட்டிருந்தனர் - தமிழக அரசு

அனுமதி கேட்கப்பட்ட நேரத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய வந்ததால் அனுமதித்தோம் - தமிழக அரசு

மாலை 5.30 மணி வரை கட்டுப்படுத்தும் அளவில் தான் கூட்டம் இருந்தது; அதன் பின்னர் தான் கூடுதல் கூட்டம் வந்தது - தமிழக அரசு

அண்டை மாவட்டங்களில் இருந்து பிரேத பரிசோதனைக்காக 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர் - தமிழக அரசு

இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு பதில்

அசாதாரண சூழல்களில் ஆட்சியர்களின் ஒப்புதல் பெற்று இரவு நேரங்களிலும் உடற்கூராய்வு செய்யலாம் - தமிழக அரசு

சேலத்தில் நடைபெற்ற பொது சுகாதார மாநாட்டில் பங்கேற்ற மருத்துவர்கள் கரூருக்கு சென்றனர் - தமிழக அரசு

விக்கிரவாண்டியைவிட மதுரை மாநாட்டில் கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டது - ஏடிஜிபி

நாமக்கல் கூட்டத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டனர்; சிலர் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

விக்கிரவாண்டி மாநாட்டில் 42 பேர் காயமடைந்தனர்; மதுரை மாநாட்டில் 16 பேர் காயம்


நாமக்கல் கூட்டத்தில் 34 பேர் பாதிக்கப்பட்டனர்; சிலர் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

நாமக்கலில் வெப்ப தாக்கத்தால் பலர் மயக்கமடைந்தனர்; கரூரில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு காரணம் வெப்பம் கிடையாது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவி தலையை வெட்டிய  'சைக்கோ' கணவன்..!  மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies