உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025
மாவட்டம்
நாய் கடித்து 2 மாதங்களாக சிகிச்சை பெறாமல் விட்டதால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
Sep 26, 2025 01:05 AM
51
ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு முன்பு நாய்க்கடிக்கு உள்ளான 17 வயது சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தாததால் அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
சிறுவனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படத் தொடங்கியபோது, தனியார் மருத்துவமனைக்கும் பிறகு அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு ரேபிஸ் உறுதி செய்யப்பட்டு, தனி வார்டில் சேர்க்கக் கூறியுள்ளனர். மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல், தன்னிச்சையாக புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், நோய் முற்றி, சிறுவன் உயிரிழந்தார்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுவனின் பெற்றோர் உட்பட அப்பகுதியில் வசிக்கும் 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அவர்கள் இன்னும் மூன்று தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். நாய், பூனை, குரங்கு போன்ற விலங்கினங்கள், கடித்தாலோ, நகத்தால் வறண்டினாலோ, நாக்கால் நக்கினாலோ உடனடியாக அதற்கான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu