இந்தியா
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜினாமா.. அடுத்து என்ன நடக்கும்?
Jul 22, 2025 05:32 AM
37
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜினாமா.. அடுத்து என்ன நடக்கும்?
ஜகதீப் தன்கர் பதவி விலகல் முடிவை திரும்பப் பெறவில்லை என்றால் குடியரசுத் தலைவரால் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், குடியரசுத் துணைத் தலைவர் பதவி காலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
அதற்கு அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும்.
தேர்தல் ஆணையம் நடத்தும் அந்த தேர்தலில் மாநிலங்களவை மற்றும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கலாம்.
குடியரசு துணைத் தலைவராக தேர்வாகுபவர், பதவியேற்ற நாளிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுமையாக பதவியில் நீடிப்பார்.
குடியரசு துணைத்தலைவரே மாநிலங்களவைத் தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் என்பதால், காலியாக உள்ள மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் தற்காலிகமாக இருப்பார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu