RECENT NEWS

"தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது பாஜக" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முகப்பு

"பெத்த பொண்ணு சாவ கூட மாத்தி சொன்னேன்" மகளுக்கு பாலியல் தொல்லை..! போலீஸ் மீது பெண் பகீர் குற்றச்சாட்டு

Jul 20, 2025 12:40 PM

258

"பெத்த பொண்ணு சாவ கூட மாத்தி சொன்னேன்" மகளுக்கு பாலியல் தொல்லை..!

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் மலர். இவர் திருமணமாகி கணவர், 2 மகள்கள் மற்றும் 1 மகன் என 3 குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு மலரின் சகோதரருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் புகார் அளிக்க வில்லியனூர் போக்குவரத்து காவல்நிலையத்திற்கு சென்ற மலர், அங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சிவ ஜான்சன் கென்னடி என்பவரை சந்திந்துள்ளார்.

சிவ ஜான்சன் கென்னடி, மலருக்கு உதவி செய்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மலர் வீட்டில் இருக்கும் போது, சிவ ஜான்சன் கென்னடி சுவர் எகிறி குதித்து சென்றதாகவும், அதனை பார்த்த மலரின் கணவர் மலரை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது .

இதனை தொடர்ந்து சிவ ஜான்சன்கென்னடி, மலரிடம் ஆசை வார்த்தை கூறியதாகவும், வீட்டில் வைத்து தாலி கட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சிவ ஜான்சன்கென்னடி, மலர், மகன், மகள்கள் என குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்

அப்போது +2 படித்து வந்த மூத்த மகளிடம் சிவ ஜான்சன் பாலியல் தொல்லை அளித்ததால், அந்த சிறுமி விஷமருந்தி உயிரை மாய்த்து கொண்டதாக மலர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது வெளியே தெரிந்தால், சிவ ஜான்சனின் போலீஸ் வேலை போய்விடும் என்பதால், 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால்தான் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக பொய் சொல்லுமாறு மலரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் தான் குடும்பத்தை பார்த்து கொள்வதாக சிவ ஜான்சன்கென்னடி கூறியதால், மலரும் மகள் இறப்பில் அப்போது பொய் சொன்னதாக தெரிவித்துள்ளார். போலீஸ் அதிகாரத்தை பயன்படுத்தி, இறப்பு சான்றிதழும் அதற்கேற்ப ரெடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது மலரின் முன்னாள் கணவருக்கு தெரிந்த நிலையில், மகனையும், மற்றொரு மகளையும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் மூத்த மகள் இறந்த துக்கம் தாங்காமல் மற்றொரு மகளும் உயிரை மாய்த்துக் கொண்டதாக மலர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மகனும் வீட்டை விட்டு பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

16 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரியோடு மலர் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், மலரின் 15 சவரன் நகை, வீட்டுப் பத்திரத்தை சிவ ஜான்சன் கென்னடி வாங்கி வைத்ததாக சொல்லப்படுகிறது.

மலருக்கு சொந்தமான மற்றொரு வீட்டிற்கு மலர் சென்றுபார்த்தபோது, அங்கு சிவ ஜான்சன் கென்னடியும் மற்றொரு பெண்ணும் உல்லாசமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிகிறது.

இதனை கண்ட சிவ ஜான்சன் கென்னடியும், மற்றொரு பெண்ணும் வீட்டில் வைத்தே மலரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் மலர் தெரிவித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் சிவ ஜான்சன் கென்னடியின் சகோதரர் பிரகாஷ் வக்கீல் என்பதால், நீ என்ன செய்தாலும் என்னை ஒன்னும் செய்யமுடியாது என்று சிவ ஜான்சன் கென்னடி மிரட்டல் விடுத்ததாக மலர் தெரிவித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் கென்னடியால் ஏற்கனவே தனது குடும்பம் சீரழிந்துவிட்டதாகவும், தற்பொழுது யாருமின்றி நடுத்தெருவில் நிற்பதாகவும், மேலும் தனது உயிர் மற்றும் தனது மகனின் உயிருக்கு ஆய்வாளர் கென்னடி மற்றும் அவரது சகோதரர் வழக்கறிஞர் பிரகாஷ் என்பவரால் ஆபத்து உள்ளதாகவும், தங்களுக்கு எது நடந்தாலும் ஆய்வாளர் கென்னடிதான் காரணம் என பாதிக்கப்பட்ட பெண் மலர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள காவல் தலைமையகத்திற்கு சென்ற மலர், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் உதவியோடு புகார் அளித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் 5,000 ரூபாய் சம்பளம்!.. Call Boy Job ரெடியா? கரும்பு தின்னக்  கூலி... தினம் தினம் ஜாலி... மாறிய Climax
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies