BIG STORIES
ஆசை ஆசையாய் காத்திருந்து வீட்டில் அடம்பிடித்த இளைஞர்..! ஒன்றரை மாதத்தில் சோகம்..! உயிர் கொடுத்தவருக்கு உயிர் இல்லை..!
Jul 18, 2025 07:17 AM
306
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் ஜெயக்குமார். இவர் பிறந்த 3 மாதத்திலேயே தாய் இறந்த நிலையில், தந்தை வேறு திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் தாய் மாமாவான கோவிந்தசாமி, ஜெயக்குமாரை 3 மாத குழந்தையில் இருந்து தனது சொந்த மகன் போலவே வளர்த்து வந்துள்ளார்.
படிப்பின் மீது ஆர்வம் இல்லாத ஜெயக்குமார், தனது மாமா நடத்தி வரும் செருப்பு கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
சிறு வயதில் இருந்தே rx 100 பைக்கின் மீது தீராத காதல் கொண்ட ஜெயக்குமார், தனக்கு அந்த பைக்கை வாங்கி தருமாறு அடம் பிடித்துள்ளார்.
இதனால் தாய்மாமா கோவிந்தசாமியும் உனக்கு 18 வயது ஆனதும் வாங்கி தருகிறேன் என உறுதி அளித்துள்ளார். தனக்கு எப்போது 18 வயது ஆகும் என ஒவ்வொரு நாளும் ஆசையோடு எண்ணிக் காத்திருந்துள்ளார் ஜெயக்குமார்.
19 வயது நிரம்பிய ஜெயக்குமார், அண்மையில் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் டூவீலர் கன்சல்டிங் ஒன்றில் பழைய ஸ்க்ராப்பில், அதாவது கிட்டத்தட்ட உயிரிழந்த யமஹா rx 100 பைக்கை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார்.
பைக்கை தனது ரசனைக்கு ஏற்ப ஆல்டர் செய்ய முடிவு செய்த அவர் ஒவ்வொரு பாகங்களையும் தேடி தேடி வாங்கி கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து வாகனத்தை சிவப்பு நிறத்தில் பளபளவென மாற்றியுள்ளார்.
உயிரற்ற நிலையில் கிடந்த பைக்கிற்கு உயிர் கொடுத்து ரெடி செய்ததை தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாகவும் ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 31ம் தேதி கோவிலில் பைக்கிற்கு மாலையுடன் பூஜை செய்து பின்னர் பைக்கை ஓட்ட ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 16ம் தேதி காலையில் ஜெயக்குமார், வழக்கம் போல இன்ஸ்டாவில் பைக் வீடியோவை பதிவேற்றம் செய்து விட்டு அச்சமங்கம் பகுதியில் உள்ள தனது தாய் மாமாவின் கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து விவசாய வேலைக்காக மாலையில் கொண்டப்பநாயனப்பள்ளி நோக்கி பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தபோது, காந்திநகர் பகுதியில் சாலையில் எதிரே அதிக லோடு ஏற்றி வந்த எம்.சாண்ட் லாரி ஒன்று பைக் மீது மோதியது.
இதில் ஜெயக்குமாரின் தலை லாரியின் டயரில் சிக்கிய நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பைக் வாங்கிக் கொடுத்த ஒன்றரை மாதத்தில் ஜெயக்குமார் உயிரிழந்ததை அறிந்த அவரின் தாய்மாமாவும் குடும்பத்தினரும் கண்ணீர் மல்க கதறித் துடித்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரியை போலீசார் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றபோது வழியில் திடீரென பிரேக் பிடிக்காமல் இருந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu