BIG STORIES
”என் கணவனை கொல்” காதலனை மிரட்டி கணவனின் கதையை முடித்த ’கில்’லேடி மனைவி!
Jul 18, 2025 02:19 AM
220
கர்நாடக மாநிலம் பெலகாவி உள்ள கான்பேட்டை அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.
அவரின் கழுத்து நெரிக்கப்பட்டு, உடலில் பல்வேறு பகுதிகளில் தாக்கி, தலையில் கல்லை போட்டு கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த ராம்துர்கா காவல் நிலைய போலீசார், இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் தார்வாடில் உள்ள அம்மினபாவி கிராமத்தைச் சேர்ந்த ஈரப்பா ஆதின் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் கான்பேட்டை அருகே ஈரப்பா ஏன் கொலை செய்யப்பட்டார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. கொலையான ஈரப்பா ஆதின் என்பவருக்கு 11 ஆண்டுகளுக்கு முன், கமலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், ஈரப்பா கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவியை துன்புறுத்தத் தொடங்கினார்.
கமலா ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொடுக்கும் பணத்தில் தான் ஈரப்பா தினமும் மது அருந்து மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையே கமலா 2 ஆண்டுகளுக்கு முன்பு சபாப்பா என்ற கால்நடை வியாபாரியுடன் பழக்கம் ஏற்பட்டு, பின் அது திருமணம் தாண்டிய உறவாக மாறியிருக்கிறது.
ஒரு நாள் ஈரப்பா, போதையில் கமலாவை கடுமையாக துன்புறுத்தியுள்ளார். இதனால் மிகவும் கவலையடைந்த கமலா, காதலன் சாபாப்பாவிடம் தனது கணவர் ஈரப்பாவை கொலை செய்ய வேண்டுமென கூறியிருக்கிறார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சாபாப்பா, அப்படி எல்லாம் என்னால் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் அதனை ஏற்காத கமலா, தொடர்ச்சியாக காதலனுக்கு போன் செய்து மீண்டும் வரவழைத்திருக்கிறார்.
அப்போது ”எனது கணவனை நீ கொல்லவில்லை என்றால், நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று காதலன் சாபாப்பாவை மிரட்டியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஈரப்பாவை கொல்ல, கமலா, அவரது காதலன் சாபாப்பா மற்றும் அவரது நண்பர் பக்கிரப்பா ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டனர்.
இந்த நிலையில், அம்மினபாவியில் உள்ள பார் ஒன்றில், மது அருந்தி கொண்டிருந்த ஈரப்பாவிடம் நட்பாக பேசி, அதிக மது அருந்த வைத்துள்ளனர்.
பின்னர் வீட்டில் கொண்டுபோய் விடுவதாக கூறி, பைக்கில் சாபாப்பா மற்றும் அவரது நண்பர், கான்பேட்டைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி கொலை செய்தனர்.
கணவரின் கொலைக்குப் பிறகு மனைவி கமலா மாயமானதால், போலீசாருக்கு சந்தேகம் விசாரணை செய்யும்போது, இந்த கொடூர கொலையாக்கான காரணம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஈரப்பாவின் மனைவி கமலா அவரது காதலன் உள்ளிட்ட நால்வரையும் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu