BIG STORIES
அழகா இருந்தது தப்பா?.. மொட்டை அடிக்க வைத்த கணவன்.. வரதட்சணைக்காக சித்ரவதை.. குழந்தையுடன் பெண் விபரீத முடிவு!
Jul 18, 2025 02:15 AM
245
சமீபத்தில் திருப்பூரில் ரிதன்யாவுக்கு நடத்ததுபோல் வரதட்சணை கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாது! என அனைவரும் நினைத்து கொண்டிருக்கும் சூழலில், அதைவிட மிகக் கொடூரம், விபஞ்சிகா என்ற பெண்ணிற்கு நடந்தேறி இருக்கிறது.
தான் அனுபவித்த கொடுமைகளை இறப்பதற்கு முன் ரிதன்யா வெளியிட்ட ஆடியோ பதிவு, அனைவரின் நெஞ்சையும் உலுக்கச் செய்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது அதே போன்று ஒரு ஆடியோவை, கேரளாவைச் சேர்ந்த விபஞ்சிகா என்ற பெண் ஒருவர் வெளியிட்டு, தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், அனைவரின் மனதையும் கலங்கடிக்க செய்திருக்கிறது.
விபஞ்சிகா தான் மட்டுமல்லாமல், அவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையையும் தன்னுடன் அழைத்துச் சென்றதுதான், நம் மனதை உலுக்கச் செய்திருக்கிறது.
இப்படி ஒரு முடிவை, ஒரு தாய் எடுக்க துணித்திருக்கிறார் என்றால், அவர் எவ்வளவு மன வேதனையை அனுபவித்திருப்பார்? என்பதை அவரின் ஆடியோ பதிவுகள் நமக்கு உணர்த்த செய்திருக்கிறது.
நிதினின் தந்தை தன்னிடம் தவறாக நடந்துகொள்வதாக விபஞ்சிகா கூறும்போது, உன்னை கல்யாணம் செய்துகொண்டது எனக்காக மட்டுமல்ல, எனது தந்தைக்காகவும் தான் என கூறியதாக விபஞ்சிகாவின் ஆடியோவைக் கேட்டு ஒட்டுமொத்த கேரளாவும் கதிகலங்கி போயிருக்கிறது. அந்த அளவிற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகத்தைவிட்டு ஒரு பெண் போவதாக நினைக்கிறார் என்றால் அது நீங்கள் நினைப்பதை விட பன்மடங்கு வலுவான காரணங்கள் அந்த பெண்ணிடம் இருக்கும்.
இதையெல்லாம் நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் தலையில் கைவைத்து ஓடிவிடுவீர்கள் என விபஞ்சிகா குறிப்பிட்டிருக்கிறார்.
ரொம்ப குறிப்பாக, எல்லாம் விஷயத்தையும் என் அம்மாவிடம் பகிர முடியாது. பணம் இல்லாதவர்கள் கல்யாணம் பண்ணாமல் இருப்பது ரொம்ப நல்லது என குறிப்பிட்டிருக்கிறார். இதையெல்லாம் ஒரு பெண் சொல்கிறார் என்றால் அந்த பெண் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார்?
விபஞ்சிகா கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். 33 வயதாகும் விபஞ்சிகாவுக்கு அப்பா இல்லை. அம்மாவின் அரவணைப்பில்தான் வளர்ந்தார்.
விபஞ்சிகாவின் அம்மா தனியாக, தனது மகளை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறார். துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் HR ஆக பணிப்புரிந்துவந்தார்.
கோட்டயம் பகுதியைச் சேர்ந்த நிதிஷ் என்ற இளைஞரை 2020ல் திருமணம் செய்துகொண்டார். நிதிஷ் தற்போது எமிரேஸ்ஸில் இன்ஜினியராக பணியாற்றிவருகிறார்.
திருமணம் செய்த நேரத்தில் விபஞ்சிகாவை விட நிதிஷ் குறைவாகவே சம்பாதித்து வந்திருக்கிறார். அதன் பிறகு எமிரேட்ஸ் போன பின், அவரின் ஊதியம் கூடியிருக்கிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
துபாய் சார்ஜாவில் நிதிஷ், தனது சகோதரி மற்றும் அவரது அப்பாவுடன் இருந்திருக்கிறார். திருமணமான அடுத்த நாள் அதிகாலையிலேயே, விபஞ்சிகாவை, எழுப்பி வீட்டில் உள்ள வேலைகளை செய்ய வைத்து அனைவருக்கும் உணவு சமைக்க சொல்லிருக்கின்றார் நிதிஷின் சகோதரி.
இதுகுறித்து விபஞ்சிகா கேள்வி கேட்டபோது, தனது புது மனைவி தனக்கு எவ்வளவு சப்போர்ட்டாக இருப்பார்? என்பதை நிதிஷ் தெரிந்துக்கொள்ள ஒரு கேம் இது. என சமாளித்திருக்கிறார் நிதிஷின் சகோதரி.
ஆனால் இப்படி ஒருநாள் மட்டுமல்ல விபஞ்சிகாவுக்கு இதுப்போன்ற குடும்ப வன்முறை தொடர்ச்சியாக நடந்துவந்துள்ளது. குறிப்பாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த கொடுமைகள் தாங்க முடியாமல் விபஞ்சிகா, ஒரே வீட்டில் மற்றொரு அறையில் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் தான் அனுபவித்துவந்த இந்த கொடுமைகள் பற்றி தனது தாயிடம் விபஞ்சிகா ஏதும் கூறாமல் இருந்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இனி மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற சூழலில் தான், தனது தாய் சைலஜாவிடம் நடந்தவற்றை கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், தனக்கு தெரிந்த வழக்கறிஞரிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார். அதைத்தொடர்ந்து, அன்றைய தினம் மாலையே விபஞ்சிகா அந்த வழக்கறிஞருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி, தனது வாழ்க்கை தொடர்பாக முடிவு எடுப்பதற்காக பேச வேண்டுமென கூறியிருக்கிறார்.
இதையடுத்து 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த வாய்ஸ் மெசேஜை பார்த்த வழக்கறிஞர் எப்போது வேண்டுமானாலும் கால் செய்யுங்கள், பேசலாம் என கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு, விபஞ்சிகாவிடமிருந்ந்து எந்த ரெஸ்பான்ஸூம் இல்லை.
இதற்கிடையே விபஞ்சிகா வீட்டு பணிப்பெண், இரவில் அவரது அறையை தட்டியிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து பணிப்பெண், விபஞ்சிகாவின் கணவர் நிதிஷிடம் கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
குழந்தையை தொட்டியில் ஆட்டும் கயிற்றில் விபஞ்சிகாவும், அவரது குழந்தையும் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். விபஞ்சிகா உயிரிழந்த 3 மணி நேரத்திற்கு பிறகு, அவர் முன்பே Shedule செய்து வைத்த பேஸ்ஃபுக் பதிவு வெளியானது. தான் இறந்த பிறகு, தான் அனுபவித்த கொடுமைகள் அனைத்தும் உலகிற்கு தெரியப்படுத்த திட்டமிட்டிருந்த விபஞ்சிகா,முன்கூடியே, போஸ்டை தயார் செய்து வைத்திருந்தது தெரியவந்தது.
உருக்கமான இந்த பதிவில், ”நிறைய சகித்துக்கொண்டேன்.. காலைப்பிடித்து அழுது, என்னையும் குழந்தையும் விட்டுவிடாதே என கெஞ்சினேன், பணம் ஒன்றும் தேவையில்லை அன்பு மட்டுமே கிடைச்சபோதும் என காலில் விழுந்து கெஞ்சியும் கேட்கல... குழந்தைகாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இருந்தேன். ஆனால் குழந்தையை கூட வாழ விடவில்லை... என்னையும், குழந்தையும் ஏமாத்திட்டான். நாய் மாறி நடத்தினார்கள்.. என் குழந்தை நாய் குட்டி போன்று, உணவுக்கு காத்துக்கொண்டிருந்ததை பார்த்து, எந்த தாய் அமைதியாக இருக்க முடியும்?
என்னை வைத்துக்கொண்டே இன்னொரு பெண்ணிடம் பழகுகிறான்.. என் குழந்தையை கூட வாழ விடவில்லை...எல்லாத்திற்கும் காரணம் என்னுடைய கணவர் நிதிஷ், அவருடைய சகோதரி மற்றும் நிதிஷின் அப்பா குறிப்பிட்டிருக்கிறார்.மேலும் விபஞ்சிகா உடலில் உள்ள காயங்கள் அனைத்தையும் ஃபோட்டோ எடுத்து அவற்றையும் அந்த பதிவில் இணைத்திருந்தார்.
ரிதன்யா வழக்கில் எப்படி குடும்ப வன்முறையை எல்லாவற்றையும் கூற முடியாது என ரிதன்யா குறிப்பிட்டிருந்தாரோ அதே போன்று விபஞ்சிகா இந்த தற்கொலை பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது அந்த போஸ்டானது நீக்கம் செய்யட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யார் அதனை நீக்கம் செய்தார்? என்பது குறித்து விசாரணை நடைப்பெற்றுவருகிறது. அதுமட்டுமின்றி விபஞ்சிகா பயன்படுத்திய செல்போன் மற்றும் லாப்டாப் ஆகியவை காணமல் போய்யிருப்பதும் சந்தேகத்தை மேலும் எழுப்பி இருக்கிறது.
பேஸ்புக் பதிவுமட்டுமல்லாமல், அவர் கைப்பட தனது டைரியில் எழுதியும் வைத்திருக்கிறார். தான் அனுபவித்த கொடுமைகளை ஆடியோ பதிவிலும் வெளியிட்டிருக்கிறார்.
குறிப்பாக விபஞ்சிகா தனது கைப்பட எழுதி இருக்கும் டைரியில், ”எனது குழந்தையின் சிரிப்பை பார்க்க எனக்கு நேரம் போதவில்லை.. குழந்தையோடு சேர்ந்திருந்த நேரத்தையும், அவள் செய்த சேட்டைகளும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அது பூர்த்தியாக வில்லை.. ஆனால் நான் இந்த உலகில் இருக்க வேண்டாம்” என எழுதியிருக்கிறார்.
தான் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த போது, சாப்பாடு கொடுக்காமல் வெளியே நிற்க வைத்தனர். கழுத்தில் பெல்டை மாற்றி தாக்கினார்கள். நாய் மாறி அலைய வைத்தனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளை அவர்கள் சாப்பிட்ட பிறகு, மீதி இருந்த உணவு எனக்கா? என கேட்டபோது ”இல்லை நாய்க்கு” என்று அதனை நாயிக்கு கொடுத்தனர். அன்று நாள் முழுவதும் நான் உணவின்றி பட்டினியாக இருந்தேன்.. நான் மட்டுமல்ல எனது குழந்தையும் அதுப்போன்றே நடத்தப்பட்டாள். இதுஎல்லாம் பார்த்து ஒரு தாயாக என்னால் சும்மா இருக்க முடியவில்லை என கூறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் கொடூரத்தின் உச்சமாக, எனது தலை முடியை பிடித்து, ஷவர்மாவை எனது வாய்யில் பிடித்து திணித்தனர். எப்படி?விடுதலை-2 படத்தில் மஞ்சுவாரியர் தனது தலை முடியை வெட்டியதற்கு காரணம் சென்னது போல. விபன்சிகாவும் குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க தனது தலை முடியை மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்.
வரதட்சணை குறைவாக கொடுக்கப்பட்டதாகவும், கார் வாங்கி தரவில்லை என்றும், திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தவில்லை என்றும் தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதற்கு காரணமாக விபஞ்சிகா கூறியிருக்கிறார்.
சரி ஏன் இவ்வளவு கொடுமைகளை தாண்டி நிதிஷிடமே விபஞ்சிகா இருந்தார்? ஏன் பிரிந்து வாழ அவர் நினைக்கவில்லை என அவரின் தாயிடம் கேள்வி கேட்டபோது, குழந்தை வந்த பிறகு நிதிஷ் சரியாகிவிடுவான் என விபஞ்சிகா நினைத்துவந்ததாக கூறியிருக்கிறார்.
விபஞ்சிகாவின் தாய் தனி ஆளாக கஷ்டப்பட்டு அவரை வளர்த்ததும், தந்தை இல்லாமல் தான் அடைந்த வேதனையும் தனது குழந்தை அனுபவித்துவிட கூடாது என கடைசி வரை விபன்சிகா நிதிஷூனுடன் வாழ போராடி வந்திருக்கிறார். ஆனால் கடைசி வரை அது நடக்கவில்லை...
இந்த நிலையில் விபஞ்சிகாசின் கணவர் நிதிஷை கைதுசெய்த போலீசார், இதுகுறித்து அவரிடமும், அவரின் சகோதரி மற்றும் தந்தையிடம் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu