BIG STORIES
அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி..இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை
Jul 18, 2025 02:09 AM
179
அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி..இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை
நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி, தற்போது ரோல்ஸ் ராய்ஸில் 72 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய தருணம் குறித்து விரிவாக பார்க்கலாம்...
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் மாணவி ரிதுபர்ணா (20). என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான Rolls-Royce நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அவருக்கு ஆண்டுக்கு 72 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கபட இருக்கிறது.
இந்த நிலையில், ரிதுபர்ணா நீட் தேர்வில் தோல்வி அடைந்தத பிறகுதான், அவர் என் ஜினியரிக் படிப்பை தேர்ந்தெடுத்தார். நீட் தேர்வில் தோல்வியடைந்தாலும் மனம் தளராமல், அடுத்த இலக்கை முடிவு செய்து அதில் சாதித்தும் காட்டியிருக்கிறார்.
உலக அளவில் மிகவும் பிரபலமான ப்ராண்ட் என்றால் அது ரோல்ஸ் ராய்ல்ஸ். இங்கிலாந்தை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான இது 100 ஆண்டுகளை கடந்து, வெற்றி நடை போட்டுவருகின்றது.
நினைத்தவுடன் யார் வேண்டுமானாலும் Rolls-Royce காரை வாங்க முடியாது. ரோல்ஸ் ராய்ஸ், 1904 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பின்னர் BMW குழுமம் இதனை கைப்பற்றியது.
தற்போது உலக அளவில் செகுசு கார்களை தயாரிக்கக்கூடிய நிறுவனமாக இருந்து வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருந்ததாலே அது பெரிய கவுரவம் என்று பலரும் நினைக்கின்றனர். அதனால் தான் பிரபலங்கள் இதனை போட்டு போட்டுக் கொண்டு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படி பல பெருமைகளை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு தான் ஆண்டுக்கு 72 லட்சம் ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
மங்களூரை சேர்ந்த சரஸ்-கீதா தம்பதியின் மூத்த மகள் ரிதுபர்ணா. சிறுவயது முதலே மருத்துவராக வேண்டுமென கனவில் இருந்து வந்தார்.
ஆனால் நீட் தேர்வில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இவர் அரசு கல்லூரியில் படிக்க முடியாமல் போனது. இருப்பினும் மனம் தளராத ரிதுபர்ணா, பொறியியல் துறையில், ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பிரிவை தேர்தெடுத்து படிக்க தொடங்கினார்.
அதிக ஆர்வம் காரணமாக பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆராய தொடங்கினார். குறிப்பாக பாக்கு மரங்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் கருவி, பாக்கு அறுவடை மற்றும் தரம் பிரிக்கும் ரோபோ ஆகியவற்றை தனது குழுவுடன் சேர்ந்து வடிவமைத்தார்.
இவரின் இந்த முயற்சிக்கு கோவாவில் நடந்த ரோபோட்டிக்ஸ் சர்வதேச மாநாட்டில் அவருக்கு பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் ரிதுபர்ணாவுக்கு, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த ரோபோட்டிக்ஸ் நிபுணர்களின் அறிமுகமும் கிடைத்தது.
பின்னர் கர்நாடக தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (NITK) ஆராய்ச்சிக் குழு ஒன்றுடன் இணைந்து ரோபோடிக் அறுவை சிகிச்சை தொடர்பாகவும் கற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மைக்கான செயலியை உருவாக்கும் குழுவில் இணைந்தார்.
இதற்கிடையில்தான், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை இன்டர்ன்ஷிப்பிற்கு அணுகியிருக்கிறார். முதலில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ரிதுபர்ணாவை நிராகரித்தது. இருப்பினும் தொடர்ச்சியாக ரிதுபர்ணா முயற்சி செய்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸில் ஜெட் இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்தில், இன்டர்ன்ஷிப் செய்ய ஓராண்டு பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸில் நிறுவனம், அவருக்கு தொடர்ந்து 8 மாதங்கள் அவருக்கு பல்வேறு அசண்ட்மென்கள் மற்றும் டாஸ்குகளை வைத்தது.
ஆனால் ஒரு பக்கம் கல்லூரியின் இறுதி ஆண்டுகான தேர்வுகளுக்கு படித்துக்கொண்டே, மறுப்பக்கம் ரோல்ஸ் ராய்ஸில் நிறுவனத்தின் அசண்ட்மென்களை முடிந்துவந்தார்.
இந்த நிலையில், ரிதுபர்ணாவின் ஆர்வம் மற்றும் தொடர் முயற்சிகளை கண்டு இம்ப்ரஸான ரோல்ஸ் ராய்ஸில் நிறுவனம், அவரை தேடி வந்து வேலையை வழங்கியிருக்கிறது.
அதுவும் ஆண்டுக்கு 72 லட்சம் ரூபாய் ஊதியத்துடன்! இன்னும் சில மாதங்களில் தனது கல்லூரி படிப்பை முடிக்க இருக்கிறார் ரிதுபர்ணா. படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள Rolls-Royce நிறுவனத்தில் ஜெட் என்ஜின் உற்பத்திப் பிரிவில் இவர் பணியாற்ற இருக்கிறார்.
”என்னைப் பொறுத்தவரை,தோல்விகளை கண்டு அச்சப்படாமல் இளைஞர்கள் புதிய துறைகளில் உற்சாகத்துடன் போராடினால், நிச்சயம் இமாலய வெற்றி கிடைக்கும். நான் எனது மருத்துவர் கனவு சிதைந்த போதும், துவளாமல் வேறு துறையில் ஆர்வமோடு இயங்கினேன். இப்போது இளம் பொறியாளராக, படிப்பை முடிக்கும் முன்பாகவே 72 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு செல்வேன். இதன் மூலம் எனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவேன்.” என மன மகிழ்ச்சியும் ரிதுபர்ணா கூறியிருக்கிறார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்தாலும், துவண்டு போகாமல் தனது 20 வயதிலேயே மாற்றுத்துறையில் வெற்றிப் பெற்றிருக்கும் ரிதுபர்ணாவை பலரும் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu