RECENT NEWS

திருப்பதி திருமலையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை

BIG STORIES

"ஐயா உங்களுக்கா இந்த நிலைமை..?" DSP யின் நேர்மைக்குக் கிடைத்தப் பரிசு.. நடந்தே அலுவலகம் சென்றதால் பரபரப்பு..! பறிக்கப்பட்ட கார் திருப்பி ஒப்படைப்பு

Jul 18, 2025 01:15 AM

164

"ஐயா உங்களுக்கா இந்த நிலைமை..?" DSP யின் நேர்மைக்குக் கிடைத்தப் பரிசு.. நடந்தே அலுவலகம் சென்றதால் பரபரப்பு..! பறிக்கப்பட்ட கார் திருப்பி ஒப்படைப்பு

மயிலாடுதுறை மது விலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி சுந்தரேசனின் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறி அலுவலகத்துக்கு நடந்தே சென்ற நிலையில் , அவரது வாகனம் உடனடியாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், டிஸ்பியின் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் , மாவட்ட எஸ்.பி மறுப்பு தெரிவித்துள்ளார் நடந்தது என்ன விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

மயிலாடுதுறை மது விலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி சுந்தரேசனின் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறி அலுவலகத்துகே நடந்தே சென்றார். இது குறித்து கேட்ட போது தன்னை பழி வாங்கும் நோக்கில் திட்டமிட்டு தனது வாகனத்தை அமைச்சரின் பெயரை கூறி பறித்துக் கொண்டதாக DSP சுந்தரேசன் குற்றஞ்சாட்டினார்

தான் மனித உரிமை ஆணையத்தில் பணி புரிந்த போது காஞ்சிபுரம் காவல்துறையினரின் சித்ரவதை குறித்து விசாரித்து அறிக்கை அளித்ததால், தன்னை மயிலடுதுறை மது விலக்கு அமலாக பிரிவுக்கு மாற்றியதாக தெரிவித்தார் சுந்தரேசன், இங்கு நேர்மையக செயல்பட்டு சராய கடத்தலை தடுத்து நிறுத்தியதால் பாதிப்புக்கு உள்ளான போலீசார் தன் மீது காழப்புணர்ச்சியில் உள்ளனர். மாவட்ட எஸ்.பி யே தன்னை அழைத்து வளைந்து போகச் சொல்வதாக வேதனை தெரிவித்தார்

காவல் உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் தன்னை டார்ச்சர் செய்வதாகவும் சத்தியம் செய்து தனது ஆதங்கத்தை தெரிவித்தார் டி.எஸ்.பி. சுந்தரேசன்

டி.எஸ்.பியின் மனக்குமுறல் வெளியான நிலையில் டி.எஸ்.பியின் கார் முக்கிய அலுவலுக்காக பெறப்பட்டு மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

டி.எஸ்.பியின் பொலிரோ காரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்திச்சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த டி.எஸ்.பி சுந்தரேசன் தனக்கு அதிகாரிகளால் நேர்ந்த அநீதி குறித்து ஆவேசமாக பேசியதோடு , அவர்களால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் ஆதங்கம் தெரிவித்தார்

டி.எஸ்.பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அடியோடு மறுத்த மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின், எந்த அதிகாரியும் அப்படி செய்ய சொல்லவில்லை என்று தெரிவித்தார்

இந்த சம்பவத்தில் மட்டும் அல்ல எந்த ஒரு சம்பவத்திலும் அதிகாரத்தை காண்பிக்க செய்தாலும், அதிகாரத்தை நிரூபிக்க செய்தாலும் குற்றம் கேடு தரும்..!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies