RECENT NEWS

அதிமுக பெண் நிர்வாகிக்கும், சகோதரருக்கும் இடையே தகராறு.. தடுக்க வந்தவர்களுக்கு அடி,உதை...

அதிமுக பெண் நிர்வாகிக்கும், சகோதரருக்கும் இடையே தகராறு.. தடுக்க வந்தவர்களுக்கு அடி,உதை...

Jul 17, 2025

அதிமுக பெண் நிர்வாகிக்கும், சகோதரருக்கும் இடையே தகராறு.. தடுக்க வந்தவர்களுக்கு அடி,உதை...

அதிமுக பெண் நிர்வாகிக்கும், சகோதரருக்கும் இடையே தகராறு.. தடுக்க வந்தவர்களுக்கு அடி,உதை...

Jul 17, 2025

முகப்பு

மயக்க ஊசி செலுத்தி பாலியல் துன்புறுத்தல்? சென்னையில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! போலீஸ் எஸ்.ஐ. மீது பகீர் புகார்

Jun 30, 2025 01:35 PM

282

மயக்க ஊசி செலுத்தி பாலியல் துன்புறுத்தல்? சென்னையில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! போலீஸ் எஸ்.ஐ. மீது பகீர் புகார்

மயக்க ஊசி செலுத்தி பாலியல் துன்புறுத்தல்? சென்னையில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் மாயமான 8 வயது சிறுமி மயக்க ஊசி செலுத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவத்தில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுவதால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி திடீரென மாயமாகி உள்ளார்.

தாயில்லாமல் வளர்ந்து வரும் சிறுமியை அவரது தந்தையும், தாத்தாவும் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாயமான அச்சிறுமியை தந்தை உள்ளிட்டோர் நுங்கம்பாக்கம் பகுதியில் தீவிரமாக தேடி அலைந்துள்ளார்.

அப்போது, நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் சிறுமி இருப்பதாக சக தோழி ஒருவர் சிறுமியின் தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி அப்பகுதியில் வீடு ஒன்றில் மயங்கிய நிலையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுமியை அவரது தந்தை, தாத்தா உள்ளிட்ட உறவினர்கள் மீட்க வந்தபோது பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து அந்த வீட்டில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

பெரும் போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் இருந்து பெற்றோர் மீட்ட நிலையில், தான் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக சிறுமி தெரிவித்தார்.

வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த தன்னை லேக் ஏரியா வீட்டிற்கு அழைத்து வந்து மயக்க ஊசி போட்டதாக அவர் பகீர் தகவலை கூறினார்.

இதையடுத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

சிறுமியை மீட்கும் முயற்சியில் தாக்கப்பட்டதாக கூறப்படும் அவரது தாத்தாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி மீட்கப்பட்ட வீட்டில் உதவி ஆய்வாளர் ஒருவர் இருந்ததாகவும், அவர் தான் சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.சிறுமியை மயங்கிய நிலையில் மீட்ட நிலையில், இது குறித்து புகார் அளித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறினர்.

இந்நிலையில், சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிறுமி மீட்கப்பட்டதாக கூறப்படும் வீடு குறித்தும் அங்கிருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறுமியை அவரது உறவினர்கள் துன்புறுத்தியதாகவும், அது குறித்து சைல்டு ஹெல்ப் லைனில் புகார் அளிக்கப்போவதாக கூறியதால் தன் மீதே பொய் புகார் தெரிவிக்கப்பட்டதாக SI குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் கிழக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சம்மந்தப்பட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் குடும்பத்தினர் மீதே போலீசார் பழி சுமத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அம்மனைக் கொண்டாடும் ஆடி மாதம்.. எட்டுத் திக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல்.. மனதை மயக்கும் மாயக்குரலரசி !
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies