முகப்பு
ஆற்றினை கடக்க பரிசல் படகு அளித்த த.வெ.க நிர்வாகிகள்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..
Jun 30, 2025 07:30 AM
6
கோவை மாவட்டம் நெல்லித்துறை பஞ்சாயத்து பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக ஆற்றினை கடப்பதற்காக காரமடை ஒன்றிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பரிசல் படகு ஒன்றினை நன்கொடையாக வழங்கினர்.
8 பழங்குடியினர் கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பரளிக்காடு பரிசல்துறை - பில்லூர் அணை நீர்த்தேக்கம், அத்திக்கடவு ஆறு வழியாக பயணம் செய்ய முடியாமல் சாலை வழியாக 10 கிலோமீட்டர் சுற்றி பயணம் செய்த நிலையில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.V. ராஜ்குமார் ஏற்பாட்டில் தவெகவினர் வழங்கிய பரிசல் மூலம் குறுகிய தூரத்தில் ஆற்றினை கடக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.