முகப்பு
தமிழகம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
Jun 25, 2025 09:20 AM
30
கடலோர பாதுகாப்பு படை போலீசார் நவீன படகுகளில் ஒத்திகை
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் சென்னை மெரீனா கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரையில்
கடலோர பாதுகாப்பு படை போலீசார் ஆபரேசன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
சென்னை கடற்கரையில் காவல்துறையினர் கண்காணிப்பு=
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தீவிரவாதிகள் போல் வேடமணிந்து படகில் பதுங்கி இருந்த 6 பேரை கடலோர காவல்படையினர் மடக்கிப் பிடித்து டம்மி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் ரோந்து சென்று ஒத்திகையில் ஈடுபட்டனர்
நாகப்பட்டினம்
படகில் ரோந்து சென்ற கடலோர பாதுகாப்பு போலீசார்
கடலூர் துறைமுகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது படகில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களின் மாதிரிகளுடன் வந்தவர்களை கடலோர காவல் படையினரும் போலீசாரும் சுற்றி வளைத்தனர்.
கடலூர்
மர்ம நபர்களின் படகுகளை சுற்றி வளைத்த போலீசார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் அதிநவீன படகுகளில் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu