மாவட்டம்
வாழைப்பழம் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து.. கால்வாய்க்குள் கவிழ்ந்த கார்..!
Jun 24, 2025 01:41 AM
22
வாழைப்பழம் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில், வாழைப்பழம் பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓரமாக நின்ற கார் மீது மோதி கவிழ்ந்த விபத்தின் சி.சி.டிவி பதிவு வெளியானது.
இதில், கார் அருகிலிருந்து காய்வாக்குள் கவிழ்ந்த நிலையில், வாகனத்திலிருந்த வாழைப்பழங்கள் சிதறி விழுந்தன. வாகனம் மோதியதில் அவ்வழியாக நடந்துச் சென்ற ஹோட்டல் தொழிலாளி ஒருவரின் கால் துண்டாகி பலத்த காயம் அடைந்தார்.