முகப்பு
பேருந்தை மறித்து கடத்தி சிறை வைத்து சித்ரவதை.. ஒரு நிஜ “காதல்” கதை.. தவித்து நிற்கும் பெண்..
Jun 20, 2025 07:45 AM
89
மலரினும் மெல்லியது காதல்... என்று சினிமா கவிஞர்கள் சிலேகித்தாலும் இரும்பை விட இறுக்கமானது காதல்.. என்பதை நிரூபிக்க ஊருக்கு நாலு காதல் ஜோடிகள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அப்படி பெற்றோரை எதிர்த்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு பேருந்தில் சென்ற ஜோடியை சினிமா பாணியில் பேருந்தை மறித்து இருவரையும் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
காதல் திருமணம் செய்த அந்த பெண்ணை வீடு ஒன்றில் அடைத்து வைத்து சித்வதை செய்து தாலியை கழட்டி வீசிய தோடு, தாலி கட்டிய பையனை சரமாரியாக தாக்கி வெளுத்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்... நடந்தது என்ன விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
மாலை மாற்றி தாலி கட்டிய கையோடு, நெற்றியில் எங்கே குங்குமம் வைக்க வேண்டும் என்அது தெரியாமல் ஒரு இடத்தில் வைத்து விட்டு அதனை அழிக்கும் இந்த பையன் தான் மாப்பிள்ளை..! நெற்றியில் வைத்த குங்குமத்தை அழிப்பதை சிரித்தபடியே பார்த்து நிற்கும் இவர் தான் அந்த பொண்ணு..!
கரூர் மாவட்டம், உப்பிடமங்களத்தை அடுத்த பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி என்ற 19 வயது கல்லூரி மாணவியும், தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த 21 வயதான கணபதி என்ற இளைஞரும் பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்தனர். கணபதி புதுச்சேரியில் உள்ள பைனான்ஸில் வேலை பார்த்து வருகிறார். சதயவர்த்தினி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நண்பர்கள் உதவியுடன் கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்துவிட்டு இருவரும் 2 நாட்கள் கோவையிலேயே தங்கி இருந்தனர். சதயவர்த்தினியை காணாமல் அவரது பெற்றோர் பல ஊர்களிலும் தேடி வந்தனர்.
அதனை தொடர்ந்து புதன்கிழமை காலை பேருந்து மூலம் சொந்த ஊரான கரூருக்கு புறப்பட்டனர். பேருந்து பல்லடம் அருகே வந்தபோது, கணபதியின் உறவினர்கள் பேருந்தை வழிமறித்து இருவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, காரில் கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரையும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான் தோன்றிமலைக்கு அழைத்து வந்து கணபதியின் உறவினர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் காலையிலிருந்து அடைத்து வைத்து இருவரையும் பலமாக தாக்கியதாகவும் பெண்ணின் கழுத்தில் இருந்து தாலியை அறுத்து வீசியதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து, உனது தங்கையை கூட்டி செல் இல்லையென்றால் இருவரையும் கொன்று விடுவோம் என்று கூறியுள்ளனர். அதனையடுத்து நண்பர்களுடன் அங்கு சென்று தங்கையை மீட்ட அவரது அண்ணன் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
முதலுதவி சிகிச்சை பெற்று, சிகிச்சையில் இருந்த சதயவர்த்தினி செய்தியாளர்களை சந்தித்து, தனக்கு நடந்த கொடுமை குறித்து பேட்டியளிக்க வெளியே வந்தார். அப்போது, அந்த பெண் வெளியே வரக்கூடாது என போலீசார் வலுக்கட்டாயமாக உள்ளே செல்லுமாறு கூறினர். அதையும் மீறி சதயவர்த்தினி நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியளித்துவிட்டு உள்ளே சென்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் நடந்த சம்பவம் குறித்து முழுமையாக எடுத்துரைத்தார். நாங்கள் இரு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் தங்கள் வீட்டு பெண்ணுடைய காதலை அவர்கள் வீட்டில் எதிர்பதாகவும், கழுத்தில் இருந்த தாலி மற்றும் மெட்டியை கழட்டி விட்டி இளம் பெண்ணை அனுப்பி வைத்ததுடன், திருமணமான தகவலை வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர் என்றார்
மேலும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞரை மீட்டு, தனது தங்கையுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
வழக்கமாக காதல் திருமணம் செய்யும் ஜோடிகளில் பெண் வீட்டுக்காரர்கள் கறாராக இருந்து தங்கள் வீட்டு பெண்ணை கூட்டிச்சென்றுவிடுவார்கள் . காதலியை சேர்த்து வைக்குபடி போராடுவார்கள் ஆனால் நிஜத்தில் காதலனின் வீட்டார் செல்வாக்கானது என்பதால் இந்த பெண்ணின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த தாலியை கழட்டிவிட்டு விரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு பயந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாப்பிள்ளையின் உறவினர்கள் தலைமறைவானதாக கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu